சின்னதடாகம் அருகே செங்கல் சூளையில் இருந்து பழைய இரும்புகளை திருடிய நபர் கைது!

சின்னத்தடாகம் அருகே செங்கல் சூளையில் பழைய இரும்புகளை திருடிய அஜீஸ் என்பவரை போலீசார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்த நிலையில், அவரிடம் இருந்து 47 கிலோ பழைய இரும்பு மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.



கோவை: சின்னத்தடாகம் அருகே செங்கல் சூளையில் பழைய இரும்புகளை திருடிய நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கோவை சின்னத்தடாகம் பகுதியில் சுமார் 300க்கும் மேற்பட்ட செங்கல் சூகள் உள்ளன. சமூக நல ஆர்வலர்கள் தொடர்ந்த வழக்கில் நீதிமன்ற பிரப்பித்த உத்திரவு காரணமாக கடந்த 4 வருடங்களாக செங்கல் சூளைகள் செயல்படாமல் உள்ளன.

இந்த நிலையில் சின்னத்தடாகம் அருகில் உள்ள வீரபாண்டிபுதூர் பகுதியில் உள்ள MVN சேம்பர் என்ற செங்கல் சூளையில், நேற்று இரவு புகுந்த மர்ம நபர், அங்கு செயல்படாமல் இருந்த இயந்திரத்தில் இருந்து பழைய இரும்புகளை திருடிக் கொண்டு சென்றுள்ளார்.

அப்போது அந்த பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த தடாகம் போலீசார் சந்தேகத்தின் பேரில் அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்துள்ளனர்.

அப்போது அந்த நபர் அதே பகுதியைச் சேர்ந்த அஜீஸ் என்பதும் இவர் அங்கிருந்த செங்கல் சூளையில் இருந்து பழைய இரும்புகளை திருடி வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.



அவரிடம் இருந்து 47 கிலோ பழைய இரும்பு மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்துள்ளனர்.

Newsletter

வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் திருட்டு: கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சிசிடிவி ஆய்வு

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் திருட்டுப்போன சம்பவத்தில், ரேஸ்கோர்ஸ்...

கோவையில் நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற இளைஞரை கடித்து விரட்டிய தெரு நாய்கள்..! - சிசிடிவி

கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற நபரை தெருநாய்கள் விடாமல் குரைத்து, கடித்து துரத்தும் சிசிடிவி...

Bharathiar University Hosts Workshop on Curriculum Design and Outcome-Based Education

Bharathiar University, Coimbatore, in association with TANSCHE, organised a one-day workshop on curriculum design and as...

பீளமேடு வார்டில் மரம் அகற்றல், கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் மின்வாரியம் வெட்டிய மரங்களை அகற்றுதல், கொசு மருந்து தெளித்தல் மற்றும் சாக்கடை ச...

கோவையில் அடல் ஓய்வூதியத் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையில் மத்திய அரசின் அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கனரா வங...

டிஜிட்டல் மயமாகும் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி.: மாற்றுப் பணி கோரும் கோவை ஒப்பந்த ஊழியர்கள்

அரசு உத்தரவின் பேரில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்று (RC) உள்ளிட்ட ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்ப...