விபத்தில் மரணமடைந்த ஒப்பந்தத் துப்புரவுப் பணியாளரின் குடும்பத்தினருக்கு மாநகராட்சி ஆணையர் ஆறுதல்


கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன், பணியிலிருந்த போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்தில் மரணமடைந்த ஒப்பந்தத் துப்புரவுப் பணியாளர் ரமேஷின் குடும்பத்தினரை இன்று சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.



கோவை மாநகராட்சி, மத்திய மண்டலம், வார்டு 81-ல் ஒப்பந்த துப்புரவு பணியாளராக பணிபுரிந்து வந்த எஸ்.ரமேஷ் என்பவர் கடந்த 8.03.2017 அன்று பணியிலிருந்த போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்தில் மரணமடைந்தார்.

அவரின் குடும்பத்தினரை இன்று கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

மேலும், ஒப்பந்த துப்புரவுப் பணியாளராக பணியில் இருந்த போது உயிரிழந்த ரமேஷின் குடும்பத்திற்கு சேரவேண்டிய இழப்பீட்டுத் தொகை மற்றும் இதர பயன்கள் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

மேலும், பணியின் போது இறந்த ஒப்பந்த பணியாளருக்கு ஈடாக அவரது குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தர பணி வழங்குவதற்கு அரசு ஆணையில் வழிவகை இருப்பின் அவற்றை ஆராய்ந்து மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார். 

இந்த நிகழ்வின் போது மாநகராட்சி துணை ஆணையர் ப.காந்திமதி, நகர்நல அலுவலர் கே.சந்தோஷ்குமார் மற்றும் துப்புரவுப் பணியாளர் சங்கங்களின் பிரதிநிதிகள் ஆகியோர் உடனிருந்தனர்.

Newsletter

கோவையில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் கிருஷ்ண ஜெயந்தி விழா; ராதை, கிருஷ்ணர் வேடமிட்டு குழந்தைகள் ஊர்வலம்

கோவை விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் 14-ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா விமரிசையாக நடைபெற்றது. சாஸ்திரி ரோட்டில் இருந்து சிவ...

Palakkad–Tiruchchirappalli Express to Be Short-Terminated at Pugalur on Four Days

The Palakkad Town–Tiruchchirappalli Express will be short-terminated at Pugalur on September 5, 8, 10 and 12 due to slee...

“விஜய் பிரதமர் வேட்பாளரா? – என்னை சிக்கலில் விட்டுவிடாதீர்கள்”: கோவையில் செங்கோட்டையன் பதில்

கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் பல்வேறு துறைகளுக்கான அறிவிப்புக...

Coimbatore–Nagercoil Express to Run on Diverted Route via Podanur, Poallchi

The Coimbatore–Nagercoil Express will operate on a diverted route on September 5, 8, 10 and 12 due to sleeper renewal an...

கோவையில் 15 அடி உயரத்தில் இருந்து தொழிலாளி தவறி விழுந்து காயம்; பாதுகாப்பு வசதிகள் குறித்து புகார்

கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் சுமார் 15 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்து பலத்த காயமடைந்த தொ...

Elderly Woman Killed in Truck Collision near Velandipalayam in Coimbatore

A 70-year-old woman was killed after the scooter she was travelling on with her daughter was hit by a heavy truck on Tha...