தினமலரில் காலை சிற்றுண்டி திட்டம் கேலி..! கோவையில் வலுக்கும் எதிர்ப்பு.. திமுக போராட்டம்

தமிழ்நாடு அரசின் காலை சிற்றுண்டி உணவுத் திட்டத்தை கேலி செய்யும் விதமாக செய்தி வெளியிட்ட தினமலரை எதிர்த்து கோவை திமுக இளைஞர் அணியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். வெளியான இந்த செய்தி தமிழ்நாட்டு இளைஞர்கள் மற்றும் பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள், தமிழ் பற்றாளர்கள் இடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.



கோவை: காலை உணவுத்திட்டத்தை கொச்சப்படுத்தும் வகையில் செய்தி வெளியிட்ட தினமலர் நாளிதழை திமுக இளைஞரணி மற்றும் மாணவரணியினர் எரித்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.

தமிழ்நாடு அரசு மாணவர்கள் இடைநில்லா கல்வி பெற பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் இந்தியா முழுவதும் தமிழகத்தை முதன்மை மாநிலமாக கொண்டு வர பல மாணாக்கர்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர். இதன் காரணமாக ஏற்கனவே வழங்கிய சத்துணவுடன் முட்டை வழங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து ஆரம்ப பள்ளிகளில் காலை சிற்றுண்டி உணவு திட்டம் தொடங்கி வைக்கப்பட்டு அந்தத் திட்டம் இந்தியா முழுவதும் வெற்றிகரமாக பேசப்பட்டது. தெலுங்கானா மாநில கல்வி அமைச்சர் இத்திட்டத்தை தமிழ்நாட்டில் வந்து எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பது குறித்து கருத்துக்களை கேட்டு அறிந்தார்.

இந்நிலையில், இன்றைய தினமலர் நாளிதழில் காலை உணவு திட்டத்தை கொச்சைப்படுத்தி முதல் பக்கம் தலைப்புச் செய்தி வெளியிட்டுள்ளனர். இந்த செய்தி தமிழ்நாட்டு இளைஞர்கள் மற்றும் பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள், தமிழ் பற்றாளர்கள் இடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனை கண்டித்து பல்வேறு இடங்களில் திமுகவின் இளைஞர் அணி மற்றும் மாணவர் அணியினர் தினமலரை எரித்து அவர்களுக்கு எதிராக கோஷங்கள் போட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.



கோவையில் தினமலர் நாளிதழை கண்டித்து டவுன்ஹால் மணிக்கூண்டில், திமுக மாநகர் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தனபால் தலைமையில் திமுக இளைஞரணி மற்றும் மாணவரணியினர் தினமலர் நாளிதழை எரித்தும், கண்டன கோசங்களை எழுப்பியும் போராட்டம் நடத்தினர்.



இதில் இளைஞரணியை சேர்ந்த அருண், இளைஞரணி துணை அமைப்பாளர்கள் மணிகண்டன், மசூத், அருண் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



இந்தப் போராட்டம் சுமார் அரை மணி நேரம் நடைபெற்றது.



இதில் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தனது எதிர்ப்புகளை தெரிவித்து போராட்டம் நடத்தியுள்ளனர்.

Newsletter

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...