நீலகிரியில் யானை தாக்கி பலியானவர் குடும்பத்திற்கு நிவாரண உதவி வழங்கல்!

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருககேயுள்ள செம்பக்கொல்லி பகுதியை சேர்ந்த குட்டன் என்பவர் இரண்டு மாதத்திற்கு முன்பு யானை தாக்கி உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்திற்கு வனத்துறை சார்பில் அறிவிக்கப்பட்ட நிவாரண தொகை ரூ.5 லட்சத்தில் ஏற்கனவே ரூ.50,000 வழங்கப்பட்ட நிலையில் மீதமுள்ள ரூ.4.5 லட்சம் ரூபாய் இன்று வழங்கப்பட்டது.


நீலகிரி: கூடலூர் அடுத்த செம்பகொல்லி பகுதியில் யானை தாக்கி உயிரிழந்த நபரின் குடும்பத்திற்கு வனத்துறை சார்பில் நிவாரணத் தொகை இன்று வழங்கப்பட்டது.

நீலகிரி மாவட்டம், கூடலூா் தாலுகா, தேவா்சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட செம்பக்கொல்லி கிராமத்தைச் சோ்ந்த குட்டன். இவா், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு காட்டு யானை தாக்கி உயிரிழந்தாா்.

இந்த நிலையில் அவரது குடும்பத்துக்கு வனத்துறை சாா்பில் 5 லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது

இதில் ஏற்கெனவே ரூ.50 ஆயிரம் நிவாரண உதவி வழங்கப்படது. தற்போது மீதமுள்ள ரூ.4.50 லட்சம் நிவாரணத் தொகைக்கான காசோலை தரப்பட்டு உள்ளது.

இதனை வனத்துறை அதிகாரிகள் யானை தாக்கி பலியான குட்டன் குடும்பத்தினரிடம் வழங்கினா்.

அப்போது பேரூராட்சித் தலைவா் வள்ளி, துணைத் தலைவா் யூனஸ் பாபு, வனச் சரக அலுவலா் ராதாகிருஷ்ணன், வனவா் சுரேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...