கல்வி நிரம்பி வழிகிறதா என்று பார்க்கிறது திராவிட மாடல்! கழிவறை நிரம்பி வழிகிறதா என்று பார்க்கிறது ஆரிய மாடல்! கோவையில் திமுகவினர் போஸ்டர்

கோவை மாநகரில் திமுக சார்பில் பல்வேறு பகுதிகளில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அதில் "கல்வி நிரம்பி வழிகிறதா என்று பார்க்கிறது திராவிட மாடல்! கழிவறை நிரம்பி வழிகிறதா என்று பார்க்கிறது ஆரிய மாடல்" என்ற வாசகங்களுடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.


கோவை: காலை சிற்றுண்டி திட்டத்தை கொச்சைப்படுத்தும் வகையில் தினமலர் நாளிதழில் நேற்று செய்தி வெளியிடப்பட்டது. இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், திமுகவினர் போஸ்டர் மூலம் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

தமிழக அரசின் காலை சிற்றுண்டி திட்டம் அனைவரது மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், நேற்றைய தினம் தினமலர்(திருச்சிப்பதிப்பு) நாளிதழில் காலை சிற்றுண்டி திட்டத்தை கொச்சைப்படுத்தும் வகையில் செய்தி தலைப்புடன் செய்தி வெளியாகியிருந்தது.

அதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். நேற்று தமிழகத்தில் பல்வேறு பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டமும், தினமலர் நாளிதழ் எரிப்பு போராட்டங்களும் நடைபெற்றன.

அரசு பள்ளி மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கோவை மாநகரில் திமுக சார்பில் பல்வேறு பகுதிகளில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அதில் "கல்வி நிரம்பி வழிகிறதா என்று பார்க்கிறது திராவிட மாடல்! கழிவறை நிரம்பி வழிகிறதா என்று பார்க்கிறது ஆரிய மாடல்" என்ற வாசகங்களுடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...