தினமலர் நாளிதழுக்கு வலுக்கும் எதிர்ப்பு… கோவையில் மலம் வீசும் போராட்டம்..! தபெதிக வினர் கைது

தமிழக அரசின் காலை உணவு திட்டத்தை விமர்சித்து செய்தி வெளியிட்ட தினமலர் நாளிதழுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள தினமலர் அலுவலகம் மீது மலம் வீசும் போராட்டத்தில் ஈடுபட்ட தந்தை பெரியார் திராவிடர் கழகத்தை சேர்ந்த 30 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.



கோவை: காலை சிற்றுண்டி திட்டத்தை கொச்சப்படுத்தும் வகையில் செய்தி வெளியிட்ட தினமலர் நாளிதழுக்கு தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அந்த நாளிதழ் மீது மலத்தை வீசி கண்டனத்தை பதிவு செய்தனர்.



தமிழக அரசின் காலை உணவு திட்டத்தை விமர்சித்து செய்தி வெளியிட்ட தினமலர் நாளிதழுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள தினமலர் அலுவலகம் மீது மலம் வீசும் போராட்டத்தில் ஈடுபட்ட தந்தை பெரியார் திராவிடர் கழகத்தை சேர்ந்த 30 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு திட்டத்தை விமர்சித்து தினமலர் நாளிதழில் நேற்று செய்தி வெளியிடப்பட்டிருந்த நிலையில் பல்வேறு தரப்பில் அதற்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. இந்த நிலையில் கோவையில் சுந்தராபுரம் பகுதியில் உள்ள தினமலர் அலுவலகம் மீது மலம் வீசும் போராட்டம் நடத்தப்படும் என தந்தை பெரியார் திராவிட கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.



இந்த சூழலில் கட்சியின் பொதுச் செயலாளர் கு.ராமகிருஷ்ணன் தலைமையில் முப்பதுக்கும் மேற்பட்டோர் கோவை பொள்ளாச்சி சாலை சுந்தராபுரம் சந்திப்பு பகுதியில் ஒரு கையில் பிளாஸ்டிக் பைகளில் கொண்டு வந்த மலத்தையும் மற்றொரு கையில் தினமலர் நாளிதழ் செய்தி பிரசுரத்தையும் வைத்து கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



தொடர்ந்து அங்கிருந்து தினமலர் அலுவலகம் நோக்கி சென்ற அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதையடுத்து கையில் வைத்திருந்த நாளிதழ் பிரசுரத்தை சாலையில் போட்டும் அதன் மீது தாங்கள் கொண்டு வந்த மலத்தை வீசியும் கண்டனத்தை வெளிப்படுத்தினர்.



இதை தொடர்ந்து அதில் ஈடுபட்ட அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

Newsletter

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...

விஷு பண்டிகைக்கு கோவையில் இருந்து 5 நாட்களில் 15 டன் காய்கறி,பழங்கள் ஷார்ஜாவுக்கு ஏற்றுமதி

மலையாள புத்தாண்டு விஷு பண்டிகை முன்னிட்டு கோவை விமான நிலையத்திலிருந்து கடந்த 5 நாட்களில் 15 டன் எடை கொண்ட காய்கறிகள் மற்...

கோவை பெரியநாயக்கன்பாளையத்தில்  கொடி அணிவகுப்பு..!

பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் எல்லை பாதுகாப்ப...

அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்த கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன்..!

வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன் நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியை சந்தித...

சின்னியம்பாளையம் அருகே இளைஞரிடம் செல்போன் மற்றும் ரூ.2,000 பறிப்பு - மூவர் மீது வழக்கு

கோவை சின்னியம்பாளையம் ஆர்.ஜி.புதூர் அருகே மூன்று பேர் கொண்ட கும்பல் இளைஞரை திடீரென வழிமறித்து விலை உயர்ந்த செல்போன் மற்ற...

கோவை நேரு நகரில் 8 பவுன் தங்கச் செயின் பறிப்பு - பீளமேடு போலீசார் தீவிர விசாரணை

கோவை நேரு நகர் மேற்கு பேருந்து நிறுத்தம் அருகே பைக்கில் சென்ற பெண்ணிடமிருந்து மர்ம நபர் 8 பவுன் தங்கச் செயினை பறித்து தப...