தினமலர் நாளிதழ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.. கோவை மாவட்ட ஆட்சியரிடம் பெற்றோர்கள் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் ஒன்றினைந்து வந்து காலை உணவு திட்டத்தை கொச்சைப்படுத்திய தினமலர் நாளிதழ் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடியிடம் மனு அளித்தனர்.



கோவை: குழந்தைகளின் சாப்பாடு விஷயத்தில் விளையாடிய தினமலர் நாளிதழ் ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்தனர்.



கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் ஒன்றினைந்து வந்து தினமலர் நாளிதழ் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடியிடம் மனு அளித்தனர்.



பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பெற்றோர்கள் காலை உணவு திட்டம் குழந்தைகளுக்கு பெரிதும் பயனுள்ளதாகவும் வேலை சுமை காரணமாக பல நேரங்களில் குழந்தைகளுக்கு காலை உணவு வழங்குவதில் இடையூர் இருப்பதாக இத்திட்டம் குழந்தைகளுக்கு பசியாற்றி பயனளிக்கிறது.

தினமலர் நாளிதழில் காலை உணவு திட்டத்தை கொச்சைப்படுத்தி செய்தி வெளியிடப்பட்டிருந்தது மிகுந்த மனவேதனையும் வருத்தத்தையும் அளிக்கிறது. இந்தத் திட்டமானது பெரும்பாலும் வேலையிலேயே குழந்தைகளுக்கு பெருமளவில் பயன் அடைந்து வரும் நிலையில் இப்படி செய்தி வருவது மிகவும் கண்டிக்கத்தக்கது. தினமலர் நாளிதழ் ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் சார்பாக மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக பெற்றோர்கள் கூறினர்.

Newsletter

தாராபுரம்: “கொங்கு மண்டலம் புறக்கணிப்பு; 5 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை” – அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பி...

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...

கோவையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் இன்று...

சிங்காநல்லூர் தொகுதியில் MGR வேடத்தில் வாக்கு சேகரித்த AIADMK வேட்பாளர் கே ஆர். ஜெயராம்

சிங்காநல்லூர் தொகுதி AIADMK வேட்பாளர் K R Jayaram MGR வேடமனிந்து நந்தா நகர், திருக்குமரன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீதி...

செப்டம்பர் வரை பருத்தி இறக்குமதி வரி ரத்து செய்ய மத்திய அரசுக்கு ஜவுளி துறையினர் கோரிக்கை

பருத்தி விலை தொடர்ந்து உயர்ந்து வரும் சூழலில், தமிழக ஜவுளி தொழில்துறை நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. விவசாயிகளுக்கு பாதிப...

கோவை கண்ணப்பநகரில் அண்ணாமலை தீவிர தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியின் கண்ணப்பநகர் பகுதியில் தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் K.Annamalai, அதிமுக கோவை வடக்...