திருப்பூரில் பட்டப்பகலில் காதலி கழுத்து அறுத்து கொலை… தற்கொலைக்கு முயன்ற காதலனிடம் போலீசார் விசாரனை..!

திருப்பூரில் பட்டப்பகலில் காதலியை கழுத்தை அறுத்துக் கொன்றுவிட்டு, காதலனும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மருத்துவமனையில் உள்ள காதலனிடம் போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.



திருப்பூர்: தனியார் மருத்துவமனை பெண் ரிசப்ஷனிஸ்டை à®•ழுத்தை அறுத்து கொன்ற நிகழ்வு பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. போலீசாரின் முழு விசாரனைக்குப்பிறகே காதலியை எதற்காக காதலன் கொன்றான் என்ற விவரம் தெரியவரும்.

திருப்பூர் மாவட்டம் அவிநாசியை சேர்ந்தவர் மணிவண்ணன்.



இவரது மகள் சத்யஸ்ரீ. இவர் திருப்பூர் 60 அடி ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் ரிசப்ஷினிஸ்டாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல் வேலைக்கு வந்த சத்தியஸ்ரீ பணியை செய்து கொண்டிருந்தார்.

அப்பொழுது அங்கு வந்த நரேந்திரன் என்ற வாலிபர் அந்த பெண்ணுடன் பேசிக் கொண்டிருந்திருந்தார். திடீரென இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் நரேந்திரன் தன் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சத்யஸ்ரீ கழுத்தை அறுத்துவிட்டு தானும் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.



ரத்த வெள்ளத்தில் விழுந்த சத்யஸ்ரீயை அப்பகுதியினர் மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனாலும் அவர் மருத்துவமனை செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். நரேந்திரன் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.



இது குறித்து தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு வந்த வடக்கு போலீசார் நரேந்திரனிடம் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...