கோவை காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் நாய்களுக்கான போட்டி..!! நாய்களின் சிகை அலங்காரத்தை பார்த்து பார்வையாளர்கள் வியப்பு..!

கோவை அவினாசி சாலையில் அமைந்துள்ள காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் கோவை மாநகர காவல்துறை மற்றும் ஸ்பார்க்லிங் ஸ்டார்ஸ் என்ற தனியார் அமைப்பு இணைந்து நாய்களுக்கான போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் காவல்துறையை சார்ந்த 30 நாய்களும், பொதுமக்கள் சார்பில் இருந்து 20க்கும் மேற்பட்ட நாய்களும் பங்கேற்று தனித்திறனை வெளிக்காட்டின.



கோவை: நாய்களுக்கான போட்டியில் விதவிதமாக சிகை அலங்காரம் செய்து தங்களது செல்லப்பிராணிகளை போட்டியில் பங்கேற்க வைப்பதற்காக உரிமையாளர்கள் ஆர்வமுடன் அழைத்து வந்திருந்தனர். இந்தப்போட்டியை நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆரவாரத்துடன் கண்டுகளித்தனர்.



கோவை அவினாசி சாலையில் அமைந்துள்ள காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் கோவை மாநகர காவல்துறை மற்றும் ஸ்பார்க்லிங் ஸ்டார்ஸ் என்ற தனியார் அமைப்பு இணைந்து நாய்களுக்கான போட்டிகள் நடத்தப்பட்டன.



மாநகர காவல் துணை ஆணையர் சுகாசினி முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் காவல்துறையை சேர்ந்த துப்பறியும் மோப்ப நாய்கள் மற்றும் பொதுமக்கள் வீட்டில் வளர்த்து வரும் நாய்கள் பங்கேற்றன.



போட்டியில், காவல்துறையினரின் கட்டளைக்கு கீழ்படிதல், குற்றப்பிரிவு, வெடிமருந்து கண்டறிதல் மற்றும் போதைப்பொருள் கண்டறிதல் ஆகிய பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.



பொது மக்களுக்கான போட்டியில், 3 நிமிடத்தில் நாய்கள் தங்கள் தனித்திறமையை வெளிப்படுத்தும் போட்டி நடைபெற்றது.



இதில் கோவை, ஊட்டி, ஈரோடு, மதுரை, தருமபுரி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இருந்து 30 காவல்துறையை சேர்ந்த நாய்களும், 20க்கு மேற்பட்ட பொதுமக்களின் நாய்களும் கலந்து கொண்டது.



போட்டிகளை பார்ப்பதற்கு 100க்கு மேற்பட்ட தனியார் பள்ளி மாணவ, மாணவிகள் வந்திருந்தனர்.



இதில் நாட்டு வகை நாய்களான சிப்பி, கன்னி வகை நாய்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும் பொதுமக்கள் சிலர் அவர்கள் வளர்த்து வரும் நாய்களுக்கு ஆடைகள் அணிந்து அழைத்து வந்திருந்தது அங்கிருந்த அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.

நிகழ்ச்சியின் முடிவில் கலந்து கொண்ட நாய்களின் உரிமையாளர்கள் அனைவருக்கும் பரிசுகள் வழங்கபட்டன.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...