பல்லடத்தில் ஒரு கிலோ தக்காளி ரூ.6 விற்பனை - தலையில் முக்காடு போட்டு வேதனை தெரிவித்த விவசாயிகள்

திருப்பூர் மாவட்டம் பல்லடம் உழவர் சந்தையில் ஒரு கிலோ தக்காளி வெறும் ஆறு ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டதால் விவசாயிகள் சொல்லன்னா துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். அதிகளவில் தக்காளியை சாகுபடி செய்யப்பட்டதும், வெளிமாநிலங்களில் இருந்து வரத்து அதிகமாக இருப்பதுமே இந்த விலை வீழ்ச்சிக்கு காரணம் என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.



திருப்பூர்: தக்காளி விலை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளதால், தமிழக அரசு ஒள்முதல் செய்து விவசாயிகளுக்கு கட்டுப்படியான விலையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கேட்டுகொண்டுள்ளனர்.

கடந்த சில நாட்களாக, தக்காளி விலை கடுமையாக உயர்ந்தது. 200 ரூபாய்க்கு மேல் விற்கப்பட்ட தக்காளியை வாங்கமுடியாமல் நடுத்தர மக்கள் கஷ்டப்பட்டனர். இந்நிலையில் படிப்படியாக குறையத்தொடங்கிய தக்காளி விலை தற்போது பத்து ரூபாய்க்கு கீழ் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படுகிறது.



விலை குறைந்ததை தொடர்ந்து, இன்று காலை, திருப்பூர் மாவட்டம் பல்லடம் உழவர் சந்தை விவசாயிகள் தலையில் முக்காடு போட்டு வேதனையை வெளிப்படுத்தினர். இது குறித்து பல்லடம் உழவர் சந்தை விவசாயிகள் கூறுகையில், ' தக்காளி விலை உயர்வடைந்ததை தொடர்ந்து அதிகப்படியான விவசாயிகள் தக்காளி சாகுபடியில் ஈடுபட்டதால் உற்பத்தி அதிகரித்தது.

அண்டை மாநிலங்களில் இருந்தும் தக்காளி இறக்குமதியானதால் விலை கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. பத்து ரூபாய்க்கு கீழ் கொள்முதல் செய்யப்படுவதால் கடுமையான நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட தலைவர் ஈஸ்வரன் கூறுகையில், ' ஏற்கனவே தேங்காய் விலை வீழ்ச்சி காரணமாக விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் தமிழக அரசு கண்டு கொள்ளவில்லை. தற்போது தக்காளி விலை வீழ்ச்சி விவசாயிகளை மேலும் பாதித்துள்ளது. தக்காளி விலை உயர்ந்த போது, விவசாயிகளிடம் கொள்முதல் செய்து கூட்டுறவு சொசைட்டி மூலம் விற்பனை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது.

அதுபோல் தற்போது தக்காளி விலை வீழ்ச்சியால் நஷ்டத்தை சந்தித்து வரும் விவசாயிகளிடமிருந்து தக்காளிகளை போதிய விலைக்கு கொள்முதல் செய்து பொதுமக்களுக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். முன்னதாக, நேற்று கிலோ பத்து ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்ட தக்காளி, இன்று ஆறு ரூபாய்க்கு கொள்முதல் ஆனது. இதையடுத்து, தமிழக அரசுக்கு தெரிவிக்கும் வகையில், விவசாயிகள், தலையில் முக்காடு அணிந்து வேதனையை வெளிப்படுத்தினர்.

Newsletter

22 லட்சம் மாணவர்களின் மருத்துவ கனவை சிதைத்த ஒன்றிய அரசு - நீட் தேர்வு ரத்து கோரி பல்சமய நல்லுறவு இயக்கம் வலியுறுத்தல்

கோயம்புத்தூரில் பல்சமய நல்லுறவு இயக்கம் நீட் தேர்வில் நடக்கும் முறைகேடுகளை கண்டித்து, வட மாநிலங்களில் வினாத்தாள் கசிவு ம...

22 லட்சம் மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைத்த ஒன்றிய அரசு - முறைகேடுகளுடன் நடக்கும் NEET தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தல்

NEET தேர்வில் தொடர் முறைகேடுகள் நடந்து வருவதாக குற்றம்சாட்டி, பல்சமய நல்லுறவு இயக்கம் உடனடியாக தேர்வை ரத்து செய்ய வேண்டு...

AIADMK சூலூர் வடக்கு ஒன்றிய செயலாளர் வி.பி.கந்தவேல் கட்சியிலிருந்து ராஜினாமா

கோயம்புத்தூர் தெற்கு மாவட்ட AIADMK சூலூர் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் வி.பி.கந்தவேல், கட்சியின் தற்போதைய நிகழ்வுகளால் மன...

கோவை மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் உள்விளையாட்டு அரங்கங்கள் அமைக்கும் பணிகளை கோவை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் கைப்பந்து, இறகுபந்து, கபடி, Wushu உள்ளிட்ட விளையாட்டுகளுக்கான உள்விளையாட...

கோவை மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் உள்விளையாட்டு அரங்கங்கள் அமைக்கும் பணிகளை ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் கைப்பந்து, இறகுபந்து, கபடி, Wushu உள்ளிட்ட விளையாட்டுகளுக்கான உள்விளையாட...

முதல்வரின் தனிப்பட்ட ஜோதிடரின் OSD நியமனம் ரத்து: தமிழக அரசு உத்தரவு

முதல்வரின் தனிப்பட்ட ஜோதிடரான ரிக்கே ராதன் பண்டிட் வெற்றிவேலின் அரசியல் OSD நியமனத்தை, கடும் எதிர்ப்புகள் மற்றும் விமர்ச...