முதல்வரின் தனிப்பட்ட ஜோதிடரின் OSD நியமனம் ரத்து: தமிழக அரசு உத்தரவு

முதல்வரின் தனிப்பட்ட ஜோதிடரான ரிக்கே ராதன் பண்டிட் வெற்றிவேலின் அரசியல் OSD நியமனத்தை, கடும் எதிர்ப்புகள் மற்றும் விமர்சனங்களைத் தொடர்ந்து தமிழக அரசு ஒரு நாளிலேயே ரத்து செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.


சென்னை:பொதுமக்கள் மற்றும் எதிர்க்கட்சிகளின் கடும் விமர்சனங்களைத் தொடர்ந்து, முதலமைச்சரின் சிறப்புப் பணி அதிகாரியாக (OSD) நியமிக்கப்பட்டிருந்த அவரது ஜோதிடர் ரிக்கே ராதன் பண்டிட் வெற்றிவேலின் நியமனத்தை தமிழக அரசு ரத்து செய்துள்ளது.

தமிழக அரசின் அதிகாரப்பூர்வ உத்தரவின்படி, மே 12, 2026 அன்று வெளியிடப்பட்ட ஆணை எண் 675 மூலம் வழங்கப்பட்ட நியமனம், தற்போது மே 13, 2026 தேதியிட்ட ஆணை எண் 684 மூலம் திரும்ப பெறப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

“Officer on Special Duty to Chief Minister” பதவிக்கான நியமனம் உடனடியாக ரத்து செய்யப்படுவதாக அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இந்த ரத்து நடவடிக்கை முதலமைச்சர் அலுவலகத்தின் குறிப்பின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவில் தமிழக அரசின் முதன்மை செயலாளர் ரீட்டா ஹரிஷ் தக்கர் கையெழுத்திட்டுள்ளார்.

நியமனம் வெளியான சில மணி நேரங்களிலேயே அரசியல் வட்டாரங்களில் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், ஒரே நாளில் அந்த நியமனம் ரத்து செய்யப்பட்டிருப்பது அரசியல் மற்றும் நிர்வாக வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், நியமனம் ஏன் ரத்து செய்யப்பட்டது என்பது குறித்து அரசு தரப்பில் அதிகாரப்பூர்வ விளக்கம் வெளியாகவில்லை.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...