கோவை தடாகம் பகுதியில் உரிமம் இல்லாமல் துப்பாக்கி பதுக்கி வைத்திருந்த நபர் கைது - போலீசார் தீவிர விசாரனை

கோவை தடாகம் காவல் எல்லைக்குட்பட்ட நஞ்சுண்டாபுரம் பகுதியில் உரிமம் இல்லாமல் துப்பாக்கியை வைத்திருந்த ஞானசேகரன் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடம் இருந்து தோட்டாக்கள் மற்றும் கரி மருந்துகளும் பறிமுதல்.



கோவை: நாட்டு துப்பாக்கி, பயன்படுத்தாத 1 தோட்டா மற்றும் பயன்படுத்திய 30 தோட்டாக்கள் மற்றும் தோட்டா செய்வதற்கான 350கி கரி மருந்து ஆகியவற்றை நபர் ஒருவர் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததைப்பார்த்து வனத்துறையினர் அதிர்ச்சியடைந்தனர்.

கோவை வனச்சரகம் நஞ்சுண்டாபுரம் பகுதியில் வனக் களப்பணியாளர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். ஞானசேகரன் என்பவருக்கு சொந்தமான எம்.எஸ்.கே சேம்பர் பகுதியில் ஒரு நாட்டு துப்பாக்கியும், பயன்படுத்தாத 1 தோட்டா மற்றும் பயன்படுத்திய 30 தோட்டாக்கள் மற்றும் தோட்டா செய்வதற்கான 350கி கரி மருந்து ஆகியவை வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டதில் அவர் வைத்திருந்தது உரிமம் இல்லாத துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் என தெரிய வந்தது.

இதனைடுத்து ஞானசேகரனை தடாகம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதனை அடுத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு துப்பாக்கிகளை கைப்பற்றி ஞானசேகரன் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

Newsletter

கோவையில் உள்ள பல்வேறு அணைகளின் நீர்மட்டம் மற்றும் நீர் வெளியேற்ற விவரங்கள்

கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் நீர்வரத்த...

கோவையில் கற்பகம் பார்மசி கல்லூரியில் 325 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

கோவை ஒத்தக்கால் மண்டபத்தில் கற்பகம் பார்மசி கல்லூரியின் பட்டமளிப்பு விழா-2026 மே 2 ஆம் தேதி நடைபெற்றது. 242 பி.பார்ம், 6...

காதல் விவகாரத்தில் தற்கொலை குறுஞ்செய்தி அனுப்பிய கோவை கல்லூரி மாணவி மாயம்

கோவையில் தனியார் மருத்துவமனையில் பயிற்சி பெற்று வந்த கேரளாவைச் சேர்ந்த 23 வயதான கல்லூரி மாணவி மாயமான சம்பவம் பரபரப்பை ஏற...

கோவையில் 16 மையங்களில் இன்று நீட் தேர்வு: 7,181 பேர் பங்கேற்பு

கோவை மாவட்டத்தில் இன்று நடைபெறும் நீட் (NEET) நுழைவுத் தேர்வில், 16 மையங்களில் 298 அரசு பள்ளி மாணவர்கள் உட்பட மொத்தம் 7,...

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...