பிளாஸ்டிக் மறுசுழற்சி தொழிற்சாலைக்கு தடை விதிக்க கோரி ஆட்சியர் அலுவலகத்தில் மனு!

காங்கேயம் அடுத்த சிவன்மலை பகுதியில் பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் அமையக்கூடிய பிளாஸ்டிக் மறுசுழற்சி தொழிற்சாலைக்கு தடை விதிக்க கோரி அப்பகுதி மக்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.



திருப்பூர்: காங்கேயம் அடுத்த சிவன்மலை பகுதியில் அமைய உள்ள பிளாஸ்டிக் மறுசுழற்சி தொழிற்சாலைக்கு தடை விதிக்க கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு அளித்தனர்.



திருப்பூர் மாவட்டம் காங்கேயம் வட்டம் சிவன்மலை கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான பிளாஸ்டிக் மறுசுழற்சி தொழிற்சாலை துவங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலை அமையும் பகுதியில் தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் குடியிருப்பு, தோட்டங்கள், அங்கீகரிக்கப்பட்ட வீட்டுமனைகள், கால்நடை மேய்ச்சல் நிலங்கள் ஆகியவை உள்ளது.

எனவே இந்த தொழிற்சாலை அமையும் பட்சத்தில் அங்கிருந்து வரக்கூடிய புகையால் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களுக்கும் கால்நடைகளுக்கும் ஏராளமான நோய் பாதிப்புகள் ஏற்படும் நிலை உள்ளது.



பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் அமையக்கூடிய பிளாஸ்டிக் மறுசுழற்சி தொழிற்சாலையை உடனடியாக தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அப்பகுதியை சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்ட பொதுமக்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மனு அளித்தனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி இந்திய அளவில் 7வது இடம் பெற்று சாதனை

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி, EducationWorld தேசிய தரவரிசையில் இந்திய அளவில் 7வது இடத்தையு...

டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்: பீளமேடு வாணிப கழக அலுவலகத்தில் பரபரப்பு

கோவை பீளமேடு மதுபான கிடங்கு வாணிப கழக அலுவலகத்தில் டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம் ந...

சோமனூர் பேருந்து நிலையம் அருகே மின் கம்பத்தில் தீ விபத்து

கோவை சோமனூர் பேருந்து நிலையம் அருகே ஏப்ரல் 27 மதியம் மின் கம்பத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. மதிய நேரத்தில் மக்கள்...

திருப்பூரில் கட்சித் தலைவர் மீது அவதூறு பரப்பியதாக புகார்

திருப்பூரில் மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமீமுன் அன்சாரி மீது சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாகக் குற்றம் சாட்டி இந்தி...

GCT கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள EVM இயந்திரங்களை கலெக்டர் திடீர் ஆய்வு

கோவை மாவட்டம் 10 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் அடங்கிய EVM இயந்திரங்கள் தடாகம் சாலை GCT கல்லூரியில் பாதுகாப்பாக...

கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தை திமுக நிர்வாகிகள் ஆய்வு

கோவை மாவட்டத்தில் 10 தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ண...