வால்பாறை அருகே டீசல் ஏற்றி வந்த லாரி சாலையில் கவிழ்ந்து விபத்து!

வால்பாறை அடுத்த வாட்டர்பால்ஸ் பகுதியில் டீசல் ஏற்றி வந்த லாரி ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் தீப்பற்றாத வண்ணம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.



கோவை: வால்பாறை அருகே வாட்டர் பால்ஸ் எஸ்டேட் பகுதியில் டீசல் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவையில் இருந்து வால்பாறை போக்குவரத்து பணிமனைக்கு காளி என்பவர் டீசல் லாரியை ஒட்டி வந்து உள்ளார். அந்த லாரியில் 12 ஆயிரம் லிட்டர் டீசல் இருந்து உள்ளது.



இந்நிலையில், வால்பாறைக்கு வரும் வழியில் வட்டார்பால்ஸ் என்ற இடத்தில் ஓட்டுனரின் கட்டுபாட்டை இழந்த லாரியானது, சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஓட்டுனர் எந்தவித காயமும் இல்லாமல் உயிர் தப்பினார்.



இதனிடையே விபத்தில் சிக்கிய லாரியை ஒட்டி வந்த ஓட்டுனர் தப்பி ஓடிய நிலையில், லாரியில் இருந்து டீசல் சாலையில் வெளியேறி உள்ளது.



இதுகுறித்து தகவலறிந்த தீ அணைப்பு துறையினர் மற்றும் காவல் துறையினரும் சம்பவ இடத்திற்கு வந்து தீ பற்றாத வண்ணம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

சாலையில் ஓரம் பகுதியில் லாரி விழுந்து உள்ளதால் போக்குவரத்துக்கு பாதிப்பு இல்லை. மேலும் லாரியில் உள்ள டீசலை வேறு லாரிக்கு மாற்றப்பட்டு, பின் விபத்துக்குள்ளான லாரியை ஜேசிபி மூலம் அகற்றப்படும் என்று தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர்.

Newsletter

உடுமலையில் 139வது உரூஸ் கந்தூரி விழா: சிறப்பு பிரார்த்தனை, அன்னதானம்

உடுமலையில் முரீது பாபா தர்காவில் நடைபெற்ற 139வது ஆண்டு உரூஸ் கந்தூரி விழாவில் சிறப்பு பிரார்த்தனை, ஆன்மீக உரைகள் மற்றும்...

திருப்பூரில் நீட் தேர்வு: 7 மையங்களில் 3,608 மாணவர்கள் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டத்தில் 7 மையங்களில் 3,608 பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர். ஜெய்வாபாய் மையத்தில் தேர்வு எழுத வந்த மாணவியி...

கோவையில் உள்ள பல்வேறு அணைகளின் நீர்மட்டம் மற்றும் நீர் வெளியேற்ற விவரங்கள்

கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் நீர்வரத்த...

கோவையில் கற்பகம் பார்மசி கல்லூரியில் 325 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

கோவை ஒத்தக்கால் மண்டபத்தில் கற்பகம் பார்மசி கல்லூரியின் பட்டமளிப்பு விழா-2026 மே 2 ஆம் தேதி நடைபெற்றது. 242 பி.பார்ம், 6...

காதல் விவகாரத்தில் தற்கொலை குறுஞ்செய்தி அனுப்பிய கோவை கல்லூரி மாணவி மாயம்

கோவையில் தனியார் மருத்துவமனையில் பயிற்சி பெற்று வந்த கேரளாவைச் சேர்ந்த 23 வயதான கல்லூரி மாணவி மாயமான சம்பவம் பரபரப்பை ஏற...

கோவையில் 16 மையங்களில் இன்று நீட் தேர்வு: 7,181 பேர் பங்கேற்பு

கோவை மாவட்டத்தில் இன்று நடைபெறும் நீட் (NEET) நுழைவுத் தேர்வில், 16 மையங்களில் 298 அரசு பள்ளி மாணவர்கள் உட்பட மொத்தம் 7,...