உடுமலையில் காவல்துறையை கண்டித்து டி.எஸ்.பி அலுவலகம் முற்றுகை!

உடுமலை அடுத்த தும்பலபட்டி கிராமத்தில் இரண்டு தரப்பினர் இடையே ஏற்பட்ட தகராறில் ஏழு பேர் கைது செய்யப்பட்டு சம்பவத்தை கண்டித்து அப்பகுதி மக்கள் உடுமலை டிஎஸ்பி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பான சூழல் நிலவியது.



திருப்பூர்: உடுமலை அருகே காவல்துறையை கண்டித்து பொதுமக்கள் டி எஸ் பி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள தும்பலப்பட்டி ஊராட்சியில் நேற்று முன்தினம் விநாயகர் கோவில் திருவிழாவில் இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகின்றது.



இந்த நிலையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து ஒரு தரப்பினருக்கு மட்டும் ஏழு பேர் கைது செய்யபட்டதை கண்டித்து தும்பலபட்டி ஊராட்சி சேர்ந்த 500க்கும் மேற்பட்ட கிராம மக்கள் உடுமலை டிஎஸ்பி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் காவல்துறையினர் ஒரு தலைபட்சமாகநடந்து கொண்டதற்கு கண்டனம் தெரிவித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது. பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினரை முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



இதனைத் தொடர்ந்து காவல் துறையினர் கிராம மக்கள் தரப்பில் கொடுத்தமனுவில் உள்ளவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என காவல்துறை தரப்பில் உறுதிஅளிக்கபட்டதால் ஓரு மணி நேரத்திற்கு மேல் நடைபெற்ற போராட்டம் தற்காலிமாக முடிவுக்கு வந்தது.

இருப்பினும் காவல்துறையினர் தகராறில் ஈடுபட்ட நபர்களை கைது செய்யப்படவில்லை என்றால் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என கிராம மக்கள் தெரிவித்தனர். உடுமலையில் காவல்துறையை கண்டித்து டிஎஸ்பிஅலுவலகத்தை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில்பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Newsletter

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...

இந்தியா-நியூசிலாந்து FTA: ஜவுளித் துறைக்கு புதிய வாய்ப்பு

இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை சைமா வரவேற்று, ஜவுளி ஏற்றுமதி, புதிய சந்தை அணுகல் மற்றும் வளர்ச்சி வாய்...

மேட்டுப்பாளையம்: புதிய ரயில்கள், சேவை நீட்டிப்பு; வந்தே பாரத் மேட்டுப்பாளையம் வரை நீட்டிப்பு?

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து புதிய ரயில் சேவைகள் மற்றும் நீட்டிப்புகளை தெற்கு ரயில்வே முன்மொழிந்து, சுற்றுலா...

எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாட்டால் கோவை தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் முடக்கம்

கோவையில் எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வழக்க...

கோடைக்காலம்: போத்தனூர் வழித்தடத்தில் மங்களூரு-சென்னை சிறப்பு ரயில் இயக்கம்

கோடைக்காலத்தை முன்னிட்டு கர்நாடகா மாநிலம் மங்களூரில் இருந்து சென்னை எழும்பூர்க்கு போத்தனூர் வழித்தடத்தில் சிறப்பு ரயில்...