கோவையில் கிருஷ்ணர் ஜெயந்தி விழா கொண்டாட்டம்..! கிருஷ்ணர், ராதை வேடமிட்டு சிலம்பம் சுற்றிய மாணவர்கள்

கோவை சின்னவேடம்பட்டி பகுதியில் உள்ள முல்லை தற்காப்பு கலை பயிற்சி கழகத்தின் சார்பில் கிருஷ்ணர் ஜெயந்தியை கொண்டாடும் விதமாக, அங்கு பயிற்சி பெறும் குழந்தைகளுக்கு கிருஷ்ணர், ராதை வேடம் அணிவிக்கப்பட்டு சிலம்ப பயிற்சி அளிக்கப்பட்டது.


கோவை: கிருஷ்ணர் ஜெயந்தியை கொண்டாடும் விதமாக, அங்கு பயிற்சி பெறும் குழந்தைகளுக்கு கிருஷ்ணர், ராதை வேடம் அணிவிக்கப்பட்டு சிலம்ப பயிற்சி அளித்த. முல்லை தற்காப்பு கலை பயிற்சி கழகத்தின் பயிற்சியாளர் பிரகாசுக்கு பெற்றோர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

கிருஷ்ணர் ஜெயந்தி விழா நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளில் ஆண் குழந்தைகளுக்கு கிருஷ்ணர் வேடமும், பெண் குழந்தைகளுக்கு ராதை வேடமும் அணிவித்து கிருஷ்ணர் ஜெயந்தி விழாவை கொண்டாடுவது வழக்கம்.

இன்றைய தினம் அனைத்து கிருஷ்ணர் கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் பூஜைகள் மேற்கொள்ளப்படும். அதுமட்டுமின்றி பல்வேறு இடங்களில் கிருஷ்ண ஜெயந்தி சிறப்பு நிகழ்ச்சிகளும் நடத்தப்படும்.



இந்நிலையில் கோவை சின்னவேடம்பட்டி பகுதியில் உள்ள முல்லை தற்காப்பு கலை பயிற்சி கழகத்தின் சார்பில் கிருஷ்ணர் ஜெயந்தியை கொண்டாடும் விதமாக, அங்கு பயிற்சி பெறும் குழந்தைகளுக்கு கிருஷ்ணர், ராதை வேடம் அணிவிக்கப்பட்டு சிலம்ப பயிற்சி அளிக்கப்பட்டது. முல்லை தற்காப்பு கலை பயிற்சி கழகத்தின் பயிற்சியாளர் பிரகாஷ் இந்த புதுவித நிகழ்வை மேற்கொண்டார். பொதுவாக கிருஷ்ணர் ஜெயந்தியில் குழந்தைகளுக்கு கிருஷ்ணர் ராதை வேடம் அணிந்து ஆடல் பாடல் நாடகங்கள் என நிகழ்ச்சிகள் நடத்தப்படும் நிலையில் இவரது இந்த புதுவித முயற்சி அங்குள்ள அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. இதில் அக்குழந்தைகளின் பெற்றோர்கள் கலந்து கொண்டு குழந்தைகளை உற்சாகப்படுத்தினர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...