திராவிடத் தமிழர் கட்சியின் சார்பில் கோவையில் சனாதன ஒழிப்பு ஆர்ப்பாட்டம்..!!

உதயநிதி ஸ்டாலினின் சனாதன ஒழிப்பு கருத்துக்கு ஆதரவு தெரிவித்து கோவையில் சனாதன ஒழிப்பு ஆர்ப்பாட்டத்தை திராவிடர் தமிழர் கட்சியினர் முன்னெடுத்துள்ளனர்.



கோவை: உதயநிதிக்கு ஆதரவாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், We Support Udhayanithi Stalin, We Denied Sanadana Dharma, Untouchability, Unseeability, Unspeakability is Sanadana ஆகிய பதாகைகளை ஏந்தியடி கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கடந்த இரு தினங்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்பது போல் பேசி இருந்தார். அதற்கு பல்வேறு இந்து அமைப்புகள் பாஜகவினர் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே அயோத்தியை சேர்ந்த சாமியார் ஒருவர் உதயநிதி ஸ்டாலினை கடுமையாக விமர்சித்ததோடு அவரை கொல்ல வேண்டும் எனவும் உதயநிதி ஸ்டாலினின் தலையை கொண்டு வருபவர்களுக்கு 10 கோடி ரூபாய் வழங்கப்படும் எனவும் பேசிய வீடியோ காட்சிகள் வைரலானது.

இந்நிலையில் கொலைவெறி மற்றும் கொலைவெறியை தூண்டும் விதமாக அந்த சாமியார் பேசி இருப்பதாகவும் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, திமுக உட்பட பல்வேறு திராவிட இயக்கங்கள் அந்ததந்த மாவட்டங்களில் உள்ள மாநகர காவல் ஆணையாளர், அலுவலகங்களில் புகார் மனு அளித்து வருகின்றனர். சமூக வலைதளங்களில் சாமியாருக்கு கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

அதே சமயம் சாமியார் பேசியது சரி என்பது போல் பல்வேறு இந்து அமைப்புகள் தெரிவித்து வருவதால் இந்தியாவில் "சனாதனம்" என்ற வார்த்தை பேசு பொருளாகி உள்ளது.



உதயநிதி ஸ்டாலினின் சனாதன ஒழிப்பு கருத்துக்கு ஆதரவு தெரிவித்து சனாதன ஒழிப்பு ஆர்ப்பாட்டத்தை திராவிடர் தமிழர் கட்சியினர் முன்னெடுத்துள்ளனர்.



கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் தலைவர் வெண்மணி தலைமை வகித்தார்.



மேலும் இதில் ஆதித் தமிழர் பேரவை பொதுச் செயலாளர் ரவிக்குமார் தந்தை பெரியார் திராவிடர் கழகப் பொருளாளர் சாஜித் உட்பட கலர் கலந்து கொண்டு சனாதன ஒழிப்பு குறித்தான பதாகைகளை ஏந்தியும், We Support Udhayanithi Stalin, We Denied Sanadana Dharma, Untouchability, Unseeability, Unspeakability is Sanadana ஆகிய பதாகைகளை ஏந்தியும் ஆர்ப்பாட்ட முழக்கங்களை எழுப்பினர்.



Newsletter

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...

139th Kandhuri Urs Festival in Udumalpet Marked by Prayers and Feast

The 139th annual Kandhuri Urs festival at Mureedu Baba Dargah in Udumalpet was marked by special prayers, spiritual disc...

உடுமலையில் 139வது உரூஸ் கந்தூரி விழா: சிறப்பு பிரார்த்தனை, அன்னதானம்

உடுமலையில் முரீது பாபா தர்காவில் நடைபெற்ற 139வது ஆண்டு உரூஸ் கந்தூரி விழாவில் சிறப்பு பிரார்த்தனை, ஆன்மீக உரைகள் மற்றும்...