கோவையில் கடைக்குள் புகுந்த கார்: ஒரு ஆண் உட்பட 3 பேர் காயம்..! எப்படி விபத்து ஏற்பட்டது என காவல்துறை விசாரனை

கோவையில் வேகமாக வந்த கார் ஒன்று நிலைத்தடுமாறி சாலையோரத்தில் இருந்த கடைக்குள் புகுந்தது. இதில் காரை ஓட்டிவந்தவரும், அதில் பயணம் செய்த இரண்டு பெண்களும் படுகாயமடைந்தனர்.


கோவை: சாலையோரத்தில் இருந்த கடைக்குள் கார் புகுந்த விபத்து ஏற்படுத்தியது சாலையில் சென்றவர்களை பதபதவைக்கும் வகையில் இருந்தது. இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

கோவை-திருச்சி ரோட்டில் சிங்காநல்லூர் போலீஸ் நிலையம் அருகே இன்று காலை ஒரு கார் வேகமாக வந்தது. அப்போது நிலைதடுமாறி அருகில் உள்ள கடைக்குள் புகுந்தது. இதில் காரை ஓட்டி வந்த ஒரு ஆண் மற்றும் 2 பெண்கள் படுகாயம் அடைந்தனர். அவர்களுக்கு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கடைக்குள் கார் மோதிய விபத்தில் அதிர்ஷ்டவசமாக ரோட்டில் சென்ற யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதுகுறித்து போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: போக்சோ நீதிமன்றத்தில் இன்ஸ்பெக்டர் சாட்சியம்

சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை போக்சோ நீதிமன்றத்தில் விசாரணை தீவிரமடைந...

40 ஆண்டு கால TNHB நில கையகப்படுத்தல் பிரச்சனை: விவசாயிகள் சங்கம் குறைதீர்ப்பு நாளில் மனு

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் நில ஆர்ஜித நடவடிக்கைகளால் 40 ஆண்டுகளாக பாதிக்கப்பட்டு வரும் சிறு, குறு விவசாயிகள் மற்ற...

ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப்: தமிழ்நாடு அணிக்கு பெருமை சேர்த்த கோவை வீரர்கள்..!

உஸ்பெகிஸ்தான் தாஷ்கண்ட் நகரில் நடைபெற்ற ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப் 2026 போட்டியில் தமிழ்நாடு அணி வெண்கலப் பதக்கம்...

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சிட்கோ, சு...

இரும்பொரை துணை மின்நிலையத்தில் இன்று மின்தடை

இரும்பொரை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இரும்பொரை, பெத்...

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுவதால...