உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து கட்சிகளுடனான அலோசனைக் கூட்டம்


கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  இன்று (மார்ச் 14) மாநில தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டுவரும் பணிகள் குறித்து அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக்கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் மற்றும் உள்ளாட்சித் தேர்தலுக்கான வரைவு வாக்குச்சாவடி மையங்களுக்கான பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. 



இந்நிகழ்ச்சிக்கு கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தலைமை வகித்து வரைவு வாக்குச்சாவடி நிலையங்களுக்கான பட்டியலை அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்டார்.

இதனைத்தொடர்ந்து அவர் பேசுகையில், கோவை மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலின்போது பொதுமக்கள் எளிதில் வாக்களிக்கும் வகையில் அவரவர் அருகில் வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கும் வகையில் கோவை மாநகராட்சியில் 100 வார்டுகளுக்கு 1197 வாக்குச்சாவடி மையயங்களிளும், பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், வால்பாறை ஆகிய மூன்று நகராட்சிகளில் உள்ள 90 வார்டுகளுக்கு 227 வாக்குச்சாவடி மையங்களும், 37 பேரூராட்சிகளில் உள்ள 585 வார்டுகளுக்கு 742 மையங்களிலும், 228 கிராம ஊராட்சிகளில் 2034 வார்டுகளுக்கு 1485 மையங்களிளும் என கோவை மாவட்டத்தில் மொத்தம் 2809 வார்டுகளுக்கு 3651 வாக்குபதிவு மையங்கள் கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், மேற்கண்ட வாக்குப்பதிவு மையங்கள் மாற்றங்கள் குறித்து அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் தகவல் மற்றும் விளக்கங்கள் தெரிவிக்க விரும்பினால் வரும் 20.03.2017 அன்றுக்குள் தங்கள் பகுதிக்குட்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தெரிவித்திடவும் மற்றும் வாக்காளர் பட்டியல் விபரம் குறித்து தங்கள் பகுதியிலுள்ள தேர்தல் நடத்தும் அலுவலரிடம் பெற்றுக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்தார். 

இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் துரைரவிச்சந்திரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ரூபன்சங்கர்ராஜா, வருவாய் கோட்டாட்சியர் மதுராந்தகி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) பி.ஹெச்.முருகன், அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.

Newsletter

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...

கவுண்டம்பாளையத்தில் பெண்களிடம் ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய நபர் மீது கைது நடவடிக்கை

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் பெண்களை குறிவைத்து அரை நிர்வாணமாக நின்று ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய 38 வயது நபரை போ...

ஆனைகட்டி அருகே உக்ரைன் சுற்றுலா பயணியை விரட்டிய காட்டு யானை

கோவை மாவட்டம் ஆனைகட்டி அருகே ஒற்றை காட்டு யானை விரட்டியதால் உயிர் தப்பிக்க ஓடிய உக்ரைன் நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணி ப...

அவிநாசி தனித்தொகுதி தவெக MLA கமலி அமைச்சராக பதவியேற்பு

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தனித்தொகுதி தமிழக வெற்றிக் கழக MLA கமலி, தவெக அரசின் இரண்டாம் கட்ட அமைச்சரவை விரிவாக்கத்தில்...

கோவை மாவட்டத்தை சேர்ந்த 2 தவெக MLA-க்களுக்கு அமைச்சரவை பதவி..!

கோவை வடக்கு மற்றும் கிணத்துக்கடவு தொகுதிகளை சேர்ந்த தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் சம்பத்குமார், விக்னேஷ் குமார் ஆகியோருக்க...

கோவையில் இன்று (21.05.2026) மாதாந்திர மின் பராமரிப்பு:  பல பகுதிகளில் மின் நிறுத்தம்

கோவை நகரில் மே 21, 2026 காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ஐந்து துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும...