தாராபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வழக்குகள் சமரச மையம் தொடக்கம்..!!

தாராபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வழக்குகள் சமரச மையத்தை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கங்கா புர்வாலா காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.



திருப்பூர்: ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் துணை சமரச மையத்தை மாவட்ட நீதிபதி ஸ்வர்ணம் நடராஜன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

நிகழ்ச்சி கூடுதல் அமர்வு மாவட்ட நீதிபதி ஜான் மனோ, சார்பு நீதிபதி எம். தர்மபிரபு, உரிமையல் நீதிபதி மதிவதனி வணங்காமுடி, குற்றவியல் நடுவர் எஸ். பாபு உள்ளிட்ட நீதிபதிகள் முன்னிலையில் நடைபெற்றது.



தாராபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வழக்குகள் சமரச மையத்தை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கங்கா புர்வாலா காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து தாராபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் துணை சமரசம் மையத்தை மாவட்ட நீதிபதி நடராஜ் தொடங்கி வைத்தார்.

தமிழகம் முழுவதும் தாலுக்கா அளவில் உள்ள அனைத்து நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளவற்றை விரைவாக முடிக்க வேண்டி சென்னை உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது. அதன் அடிப்படையில் தமிழகத்தில் உள்ள 120 தாலுக்கா நீதிமன்றத்தில் சமரச மையங்களை திறக்க முடிவு செய்யப்பட்டது.

அதன் அடிப்படையில் சென்னையில் அதற்கான காணொளி காட்சி தொடக்க விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் தலைமை நீதிபதி சஞ்சய் கங்கா புர்வாலா தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து திருப்பூர் மாவட்டம் தாராபும் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் துணை சமரச மையத்தை மாவட்ட நீதிபதி ஸ்வர்ணம் நடராஜன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.



நிகழ்ச்சியின் கூடுதல் அமர்வு மாவட்ட நீதிபதி ஜான் மனோ, சார்பு நீதிபதி எம். தர்மபிரபு, உரிமையல் நீதிபதி மதிவதனி வணங்காமுடி, குற்றவியல் நடுவர் எஸ். பாபு உள்ளிட்ட நீதிபதிகள் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற ஊழியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...