திருப்பூரில் மின்மாற்றியில் சிக்கி ஒன்றரை வயது ஆண் மயில் உயிரிழப்பு..!! இரைத்தேடி வந்தபோது பரிதாபம்.!

திருப்பூரில் மின்சாரம் தாக்கி ஒன்றரை வயது ஆண் மயில் உயிரிழந்த நிகழ்வு அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.



திருப்பூர்: இறைத்தேடி வந்த தேசிய பறவையான மயில் மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தது. உயிரிழந்த மயிலின் உடலை அடக்கம் செய்வதற்காக வனத்துறையினர் எடுத்துச்சென்றனர்.

தேசிய பறவையான மயில் நாள்தோறும் இரைத் தேடி திருப்பூர் நகர் பகுதியில் வலம் வருவது வழக்கம்.



இந்நிலையில் திருப்பூர் லட்சுமி நகர் பகுதியில் இறைத்தேடி வந்த மயில் ஒன்று மின்மாற்றியில் அமர்ந்த போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தது.



இதனைப்பார்த்த அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த அவர்கள், உயிரிழந்த நிலையில் மயிலை மீட்டனர்.

உயிரிழந்த இந்த ஆண் மயிலுக்கு ஒன்றரை வயது இருக்கும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர். இதனையடுத்து அடக்கம் செய்வதற்காக மயிலின் உடலை வனத்துறையினர் எடுத்துச்சென்றனர். மின்சாரம் தாக்கி மயில் உயிரிழந்த நிகழ்வு அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...