உயர் மின் கோபுரங்களால் விவசாய நிலங்கள் பாதிப்பு..!! கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாய சங்கம் புகார்.!

உயர் மின் கோபுரம் மற்றும் உயர் மின்னழுத்த கம்பிகளால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் புகார் மனு அளித்தனர்.


கோவை: உயர் மின் கோபுரங்கள் மற்றும் மின்னழுத்த கம்பிகளால் பாதிக்கப்பட்டுள்ள விளைநிலங்களுக்கு தமிழக அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.



மதிப்பிழந்துள்ளது- தமிழ்நாடு விவசாயிகள் சங்கம். உயர் மின்கோபுரங்கள் மற்றும் உயர் மின்னழுத்த கம்பிகளால் விவசாய நிலங்கள் மதிப்பிலிருந்து காணப்படுகிறது எனவும் அதற்கா உரிய இழப்பீட்டை வழங்க வலியுறுத்தியும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் மனு அளித்துள்ளனர்.

கோவை மாவட்டம் ஆனைமலை வட்டம் பகுதியில் நவமலை முதல் உடுமலை வரை விளை நிலங்கள் வழியாக உயர் மின் கோபுரங்கள் மற்றும் உயர் மின்னழுத்த கம்பிகள் செல்வதால் அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் மதிப்பிலிருந்து காணப்படுவதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் புகார் தெரிவித்தனர்.



எனவே அதற்கான இழப்பீட்டை தமிழக அரசு வழங்க கோரி தமிழ்நாடு விவசாயிகள் அச்சங்கத்தின் தலைவர் சு.பழனிச்சாமி தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் மனு அளித்தனர்.

வனவிலங்குகளால் விவசாய நிலங்கள் தொடர்ந்து சேதமடைவதாகவும் தமிழக அரசு இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...