நரசிம்மநாயக்கன்பாளையம் வரசித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா -  திரளான பக்தர்கள் சாமி தரிசனம்!

கோவை நரசிம்மநாயக்கன் பாளையத்தில் உள்ள வர சக்தி விநாயகர் கோவிலில் கடந்த பத்தாம் தேதி கும்பாபிஷேக விழா கோலாகலமாக தொடங்கியது. இன்றைய தினம் சூரிய கும்ப பூஜைகள், இரண்டாம் கால யாக பூஜைகள், சுவாமிகளுக்கு கண் திறத்தல், பெயர் சூட்டுதல் நடைபெற்றது.



கோவை: நரசிம்மநாயக்கன் பாளையத்தில் உள்ள வரசித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

கோவை நரசிம்ம நாயக்கன் பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள அருள்மிகு வரசிக்தி விநாயகர் கோயிலில் முதலாம் ஆண்டு விழா வள்ளி தெய்வானை கல்யாணம், சுப்பிரமணிய சுவாமி பஞ்சலோக விக்கிரகங்களுக்கு கும்பாபிஷேகம் மற்றும் திருக்கல்யாண வைபோக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

கடந்த 10ம் தேதி மாலை மங்கல இசையுடன் தொடங்கிய விழாவில் விக்னேஸ்வர பூஜை, பஞ்சகாவிய பூஜை, வாஸ்து சாந்தி, ரக்‌ஷாபந்தனம், யாகசலா பிரவேசம், முதற்கால யாக பூஜைகள், மஹா பூர்ணாஹிதி, தீபாராதனை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.



தொடர்ந்து இன்று காலை 6 மணி அளவில் தொடங்கிய பூஜையில் சூரிய கும்ப பூஜைகள், இரண்டாம் கால யாக பூஜைகள், சுவாமிகளுக்கு கண் திறத்தல், பெயர் சூட்டுதல் நடைபெற்றது.



தொடர்ந்து காமாட்சி அம்மன் கோவிலில் இருந்த மூலவர் வரசித்தி விநாயகருக்கு 108 பால் குடத்துடன் வாதியத்துடன் ஊர்வலமாக வந்து அபிஷேக பூஜைகள் நடைபெற்றன.

தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வான மூலவர் வரசித்தி விநாயகர்க்கும் மற்றும் புதியதாக செய்யப்பட்டுள்ள உற்சவ திருமேனிகளுக்கும் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.



இந்த கும்பாபிஷேகத்தின் போது நரசிம்ம நாயக்கன் பாளையம், பூச்சியூர், புதுப்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு விநாயகர் தரிசனம் பெற்றனர். 



தொடர்ந்து அனைவருக்கும் மகா அன்னதானமும் போடப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் கமிட்டியினர் மற்றும் ஊர் பொதுமக்கள் இணைந்து செய்திருந்தனர்.

Newsletter

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...