வாயில் பலத்த காயத்துடன் சுற்றித்திரிந்த குட்டியானை வனத்துறையினரின் போராட்டத்தால் மீட்கப்பட்டது


கோவை மாவட்டம், தடாகம் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 6 யானைகள் கொண்ட கூட்டம் செங்கச்சூலை, குடியிருப்புகள் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றித்திரிந்தது. இதில் இருந்து தாய் மற்றும் குட்டியானை மட்டும் தனியாக பிரிந்து குடியிருப்புகளின் அருகிலேயே சுற்றித்திரிந்தது.

இந்நிலையில், தாய் யானையை விட்டு பிரிந்து வந்த குட்டியானை குடியிருப்பு பகுதியிலேயே முகாமிட்டு சுற்றிவந்தது. இதனிடையே அந்த யானை வாயில் பலத்த காயம் இருப்பதைக் கண்ட அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனைத்தொடர்ந்து அப்பகுதிக்கு வந்த வனத்துறையினர் தொடர்ந்து அந்த யானைக்கு உணவு மூலம் மருந்து கலந்து சிகிச்சை அளித்து வந்தனர். இருப்பினும் யானையின் வாயில் ஏற்பட்டுள்ள காயத்தில் மாற்றம் இல்லாததால் மருந்து கலந்த உணவை குட்டி யானைதான் உண்கின்றதா, அல்லது வேறு ஏதேனும் யானை உண்டு விடுகிறதா என்று வனத்துறையினர் குழப்பமடைந்தனர்.

பின், அந்த குட்டியானையை மீட்டு சிகிச்சை அளிக்க முடிவுசெய்த வனத்துறையினர் கும்கி யானைகளை வரவழைத்து பிடிக்க முயற்சிக்கையில் அந்த குட்டி யானை அப்பகுதியில் இருந்து காணாமல் போனது. 

இதனிடையே, இன்று காலை மாங்கரை வன அலுவலர்கள் குடியிருப்பு பகுதியில் யானைக்கான உணவுகளை வனத்துறையினர் செய்துகொண்டிருக்கையில் அந்த குட்டி யானை மோப்பம்பிடித்து அப்பகுதிக்கு சென்றது. 

இதனைக்கண்ட மாவட்ட வன அதிகாரி பாலசுப்பிரமணியம், கால்நடை மருத்துவர் மனோகரன் உள்ளிட்ட 40 வன அதிகாரிகள் பிரத்யேக துப்பாக்கியின் மூலம் மயக்க ஊசி செலுத்தி குட்டி யானையை பிடித்தனர்.

தற்போது அந்த யானையை சாடிவயல் யானைகள் முகாமிற்கு கொண்டு சென்று தொடர்ந்து சிகிச்சை அளிக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது.

Newsletter

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...

கவுண்டம்பாளையத்தில் பெண்களிடம் ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய நபர் மீது கைது நடவடிக்கை

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் பெண்களை குறிவைத்து அரை நிர்வாணமாக நின்று ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய 38 வயது நபரை போ...

ஆனைகட்டி அருகே உக்ரைன் சுற்றுலா பயணியை விரட்டிய காட்டு யானை

கோவை மாவட்டம் ஆனைகட்டி அருகே ஒற்றை காட்டு யானை விரட்டியதால் உயிர் தப்பிக்க ஓடிய உக்ரைன் நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணி ப...

அவிநாசி தனித்தொகுதி தவெக MLA கமலி அமைச்சராக பதவியேற்பு

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தனித்தொகுதி தமிழக வெற்றிக் கழக MLA கமலி, தவெக அரசின் இரண்டாம் கட்ட அமைச்சரவை விரிவாக்கத்தில்...

கோவை மாவட்டத்தை சேர்ந்த 2 தவெக MLA-க்களுக்கு அமைச்சரவை பதவி..!

கோவை வடக்கு மற்றும் கிணத்துக்கடவு தொகுதிகளை சேர்ந்த தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் சம்பத்குமார், விக்னேஷ் குமார் ஆகியோருக்க...

கோவையில் இன்று (21.05.2026) மாதாந்திர மின் பராமரிப்பு:  பல பகுதிகளில் மின் நிறுத்தம்

கோவை நகரில் மே 21, 2026 காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ஐந்து துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும...