உடுமலை அருகே இலவச மருத்துவ ஆலோசனை முகாம் - ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு!

உடுமலை அடுத்த காமராஜ் நகர் ஒன்றிய நடுநிலைப்பள்ளியில். முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் லாவண்யா மருத்துவமனை மற்றும் எண்ணம் போல் வாழ்க்கை அறக்கட்டளை இணைந்து நடத்திய இலவச மருத்துவ ஆலோசனை முகாமில் ஏராளமான பொதுமக்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.


திருப்பூர்: உடுமலை அருகே முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் நடைபெற்ற இலவச மருத்துவ ஆலோசனை முகாமில் ஏராளமான பொதுமக்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை பெரியகோட்டை ஊராட்சி காமராஜ் நகர் ஒன்றிய நடுநிலைப்பள்ளியில். தமிழக முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் லாவண்யா மருத்துவமனை மற்றும் எண்ணம் போல் வாழ்க்கை அறக்கட்டளை இணைந்து இலவச மருத்துவ ஆலோசனை முகாம் நடைபெற்றது.

உடுமலை கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் தங்கராஜ் மெய்ஞானமூர்த்தி தலைமையில், ஒன்றிய பொதுக்குழு தலைவர் மகாலட்சுமி முருகன் பெரியகோட்டை ஊராட்சி மன்ற தலைவர் பேச்சியம்மாள் பாலசுப்ரமணியம், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் எண்ணம் போல் வாழ்க்கை அறக்கட்டளையின் நிறுவனர் முனைவர் S.A.I. நெல்சன் முன்னிலையில் இந்த முகாம் நடைபெற்றது.

இதில் டாக்டர். பரமசிவம் தலைமையிலான மருத்துவ குழுவினர் பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனை மற்றும் விழிப்புணர்வு செய்து அவர்களுக்கான மருந்து பொருட்களை வழங்கினர்.

இந்நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை தி.மு.க இளைஞர் அணியை சேர்ந்த சம்பத்குமார் செய்திருந்தார். இம்முகாமில் ஏராளமான மக்கள் கலந்துகொண்டு பயன் பெற்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...