வரும் 25ம் தேதி மாநிலம் தழுவிய போராட்டம் - தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பு அறிவிப்பு

பல்லடத்தில் தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பு சார்பில் 300க்கும் மேற்பட்டோர் தமிழக முதல்வருக்கு தபால் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 25ம் தேதி மாநில தழுவிய போராட்டம் நடைபெறும் என அவர்கள் தெரிவித்தனர்.



திருப்பூர்: சிறு தொழிற்சாலைகள் மின் நுகர்வோர்களுக்கு பீக் ஹவர் கட்டணத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும், மின்சார வாரியத்தின் வழிகாட்டுதலில் ஏற்கனவே உள்ள குறு தொழில்களில் 12k கீழ் உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பினர் கேட்டுகொண்டனர்.



சிறு தொழிற்சாலைகள் மின் நுகர்வோர்களுக்கு பீக்ஹவர் கட்டணத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும், மின்சார வாரியத்தின் வழிகாட்டுதலில் ஏற்கனவே உள்ள குறு தொழில்களில் 12k கீழ் உடனடியாக அமல்படுத்த வேண்டும், மேற்கூரை சோலார் நெட்வொர்க் கட்டணங்களை முழுமையாக ரத்து செய்ய வேண்டும், மல்டி இயர் டேரிப் உடனடியாக ரத்து செய்து சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் துறையின் இதர கட்டணங்களை உயர்த்துவதை தவிர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின் நுகர்வோர்கள் கூட்டமைப்பு சார்பில் சுமார் 150 க்கும் மேற்பட்ட தொழில் முனைவோர்கள் சங்கங்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.



இந்நிலையில் இன்று பல்லடத்தில் 300க்கும் மேற்பட்டோர் தமிழக முதல்வருக்கு தபால் அனுப்பி கவனத்தை ஈர்க்கும் வகையில் பல்லடம் தபால் நிலையத்தில் இருந்து ஸ்பீட் போஸ்ட் மூலம் கோரிக்கை மனுக்களை அனுப்பி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.



வருகின்ற செப்டம்பர் 25 ஆம் தேதி தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களில் 170 க்கும் மேற்பட்ட தொழில் முனைவோர் சங்கங்களை ஒருங்கிணைத்து ஒரு நாள் அடையாள உற்பத்தி நிறுத்த போராட்டம் நடத்த உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...