கோவையில் 3 நாட்கள் நடைபெற்ற சோதனையில் நகை, பணம் பறிமுதல் - பாரத ஸ்டேட் வங்கியில் வருமான வரித்துறை அதிகாரிகள் ஒப்படைப்பு

கோவை கட்டுமான நிறுவனத்தில் வடவள்ளி, சாய்பாபா காலனி, ராமலிங்கம் காலனி இடங்களில் 3 நாட்களாக நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட நகை, பணத்தை கோவை ரயில் நிலையம் அருகில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி தலைமை அலுவலகம் கருவூலத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் ஒப்படைத்தனர்.



கோவை: மூன்று நாட்களாக நடைபெற்ற சோதனையின் போது பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் நகைகளை வங்கியில் அதிகாரிகள் ஒப்படைத்தனர்.

கோவை கட்டுமான நிறுவனத்தில் வடவள்ளி சாய்பாபா காலனி, ராமலிங்கம் காலனி இடங்களில் 3 நாட்களாக வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது அதில் சோதனையின் போது கட்டுக்கட்டாக பணம் கைப்பற்றப்பட்டது.

வரி ஏய்ப்பு புகாரை தொடர்ந்து கடந்த மூன்று நாட்களாக கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமான அலுவலகம் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது கணக்கில் காட்டப்படாத பணம் தங்க நகைகள், விலை உயர்ந்த ஆபரணங்கள் கண்டுபிடிக்கப்பட்டது.



சோதனையில் ஈடுபட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் அனைத்தையும் பறிமுதல் செய்யப்பட்ட நகை, பணத்தை வருமானவரித்துறை அதிகாரிகள் கோவை ரயில் நிலையம் அருகில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி தலைமை அலுவலகம் கருவூலத்தில் ஏழு அதிகாரிகள் தலைமையில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் உதவியுடன் ஒப்படைத்தனர். இதில் எவ்வளவு பணம் நகை உள்ளது என்பது இதுவரை வருமான வரித்துறை அதிகாரிகள் வெளிப்படுத்த வில்லை.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...