பிரதமர் மோடியின் பிறந்தநாள் - கோவையில் பாஜக சார்பில் தாமரை திருமண விழா

பிரதமர் மோடியின் 73வது பிறந்தநாளையொட்டி, கோவை போத்தனூர்-செட்டிப்பாளையம் சாலையில் பாஜக சார்பில் தாமரை திருமண விழா நடைபெற்றது.



கோவை: பிரதமர் மோடி பிறந்தநாள் விழாவில் 73 ஜோடிகளுக்கு 73 வகையான சீர்வரிசைகளுடன் இலவச திருமணம் மற்றும் 73 குடும்பங்களுக்கு 73 நாட்டு மாடுகள் வழங்கப்பட்டன.

கோவை தெற்கு மாவட்ட பாஜக சார்பில் பிரதமர் நரேந்திர மோடியின் 73வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி

போத்தனூர்- செட்டிப்பாளையம் சாலையில் 73 ஜோடிகளுக்கு 73 வகையான சீர்வரிசைகளுடன் இலவச திருமணம் மற்றும் 73 குடும்பங்களுக்கு 73 நாட்டு மாடுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.



தாமரை திருமண திருவிழா என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த திருமண விழா கோவை பாஜக தெற்கு மாவட்ட தலைவர் வசந்தராஜன் தலைமையில் நடைபெற்றது.



இதில் தமிழ் மொழியில் மந்திரங்கள் ஓதப்பட்டது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு தாலி எடுத்து கொடுத்துமணமக்களை வாழ்த்தினார்.

இந்நிகழ்ச்சியில் மாநில பொதுச்செயலாளர் ஏ.பி.முருகானந்தம், மாநில பொருளாளர் எஸ்.ஆர் .சேகர், பாஜக பார்வையாளர் சுதாகர் ரெட்டி உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக கோமாதா பூஜை நடைபெற்றது.

Newsletter

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...