விநாயகர் சதுர்த்திக்கு முதல்வர் வாழ்த்து தெரிவிக்காது ஏன்? - இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியன் கேள்வி!

பல்லடத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவில் பேசிய காடேஸ்வரா சுப்பிரமணியம், கிறிஸ்துமஸ், ரம்ஜான் பண்டிகைகளுக்கு வாழ்த்து தெரிவிக்கும் முதல்வர் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவிக்காது ஏன்? என்றும், இந்து சமயத்திற்கு எதிராக செயல்படும் திமுக அரசுக்கு மக்கள் நிச்சயம் பாடம் புகட்டுவார்கள் எனவும் கூறினார்.



திருப்பூர்: கிறிஸ்துமஸ், ரம்ஜான் பண்டிகைகளுக்கு வாழ்த்து தெரிவிக்கும் தமிழக முதல்வர் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவிக்காது ஏன்? என இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியன் கேள்வி எழுப்பியுள்ளார்.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடும் வகையில் சுமார் 150 சிலைகள் நிறுவப்பட்டு காலை முதலே ஏராளமான பொதுமக்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.



இந்நிலையில் இன்று பல்லடம் என்.ஜி.ஆர் சாலையில் நிறுவப்பட்டுள்ள விநாயகர் சிலையினை இந்து முன்னணி கட்சி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியன் சாமி தரிசனம் செய்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.



பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது,



தமிழ்நாடு முழுக்க ஒன்றரை லட்சம் விநாயகர் சிலைகள் இந்து முன்னணி சார்பில் நிறுவப்பட்டுள்ளது. சென்னை, பெரம்பலூர் ஆகிய இடங்களில் விநாயகர் சிலை அமைக்க இடையூறு ஏற்படுத்தும் வகையில் காவல்துறையினர் பெண்களை கைது செய்துள்ளது கண்டத்துக்குரியது.

எதிர்க்கட்சித் தலைவர் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவித்துள்ள நிலையில், ரம்ஜான், கிறிஸ்துமஸ் ஆகிய பண்டிகைகளுக்கு வாழ்த்து தெரிவிக்கும் தமிழக முதல்வர் இந்து பண்டிகையான விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவிக்காதது ஏன்?.

இந்து சமயத்திற்கு எதிராக செயல்பட்டு வரும் திமுக அரசுக்கு பொதுமக்கள் நிச்சயம் பாடம் புகட்டுவார்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை கண்ணப்பநகரில் அண்ணாமலை தீவிர தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியின் கண்ணப்பநகர் பகுதியில் தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் K.Annamalai, அதிமுக கோவை வடக்...

பாஜக மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி

கோவை வடக்கு தொகுதியில் போட்டியிடும் பாஜக மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன், தீவிர பிரச்சாரத்தால் ஏற்பட்ட காலில் வலி மற்று...

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி பொருட்களின் விலை 10 சதவீதம் உயர்த்த 'காஸ்மாபேன்' சங்கம் முடிவு

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி தொழிலில் உற்பத்தி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் பவுண்டரி உற்பத்தி பொருட்க...

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி பொருட்களின் விலை 10 சதவீதம் உயர்த்த 'காஸ்மாபேன்' சங்கம் முடிவு

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி தொழிலில் உற்பத்தி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் பவுண்டரி உற்பத்தி பொருட்க...

தொண்டாமுத்தூர்: திமுக வேட்பாளர் என்.ஆர். கார்த்திகேயன் வெற்றிக்காக கட்சியினர் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் – செந்தில் பாலாஜி

தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற செயல்வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கூட்டத்தில், கூட்டணிக் கட்சிகளின் நிர்வ...

வால்பாறை: திமுக வேட்பாளருக்கு ஆதரவு கோரி டாக்டர் மகேந்திரன் பரப்புரை..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் குட்டி என்கிற ஆ. சுதாகருக்கு ஆதரவு கோரி, பொள்ளாச்சி மற்றும் வால்பாறை தேர்தல்...