துடியலூரில் விதவிதமான விநாயகர் சிலைகளை வைத்து பொதுமக்கள் உற்சாக வழிபாடு!

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் ராஜ விநாயகர், நரசிம்மவிநாயகர், நந்தி விநாயகர், இரட்டை விநாயகர், குதிரை வண்டி விநாயகர், மயில் விநாயகர், வெள்ளைமாளிகை விநாயகர், சிங்க விநாயகர் என விதவிதமான விநாயகர் சிலைகள் வைத்து பொதுமக்கள் மற்றும் இந்து அமைப்பினர் விநாயகர் சதுர்த்தி விழாவை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.



கோவை: துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் விதவிதமான விநாயகர் சிலைகளை வைத்து பொதுமக்கள் மற்றும் இந்து அமைப்பினர் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

இந்தியா முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.



இதன் ஒரு பகுதியாக கோவை துடியலூர் சுற்றுப் பகுதிகளில் இந்து முன்னணி, விஷ்வ ஹந்து பரிசத், அகில பாரத இந்து மகா சபா உள்ளிட்ட இந்து அமைப்புகள், பாரதிய ஜனதா கட்சி மற்றும் பொதுமக்கள் பொதுஇடங்கள் மற்றும் சொந்த இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு செய்து வருகின்றனர்.



இதில் துடியலூர் பேருந்து நிறுத்தம் அருகே பாஜக சார்பில் மாநில மகளிர் அணி துணைத்தலைவர் வத்சலா தலைமையில் வெள்ளி கருட விநாயகர் வைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.



தொடர்ந்து அனைவருக்கும் பிரசாதங்கள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.



இதேபோல, துடியலூர் அரவான் திடல், ரங்கம்மாள் காலனி, என்.ஜி.ஜி.ஓ காலனி, குமரபுரம், நரசிம்மநாயக்கன்பாளையம், ராக்கிபாளையம் பிரிவு, வடமதுரை, உருமாண்டம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் ராஜ விநாயகர், நரசிம்மவிநாயகர், நந்தி விநாயகர், இரட்டை விநாயகர், குதிரை வண்டி விநாயகர், மயில் விநாயகர், வெள்ளைமாளிகை விநாயகர், சிங்க விநாயகர் உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் விநயாகர் சிலைகள் வைக்கப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டு வருகின்றன.

தொடர்ந்து கோபூஜை, அஸ்வபூஜை உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. மேலும் வரும் அனைத்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. தொடர்ந்து வரும் புதன் கிழமையன்று இந்த விநாயகர்கள் வெள்ளகிணர் குளத்தில் கரைக்கப்படுகிறது. விநாயகர் சிலைகளுக்கு இரவு பகலாக காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் பிளாஸ்டிக் கிடங்கில் பயங்கர தீ விபத்து - லட்சக்கணக்கில் சேதம்

கோவை போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் உள்ள பழைய பிளாஸ்டிக் கிடங்கில் நேற்று மாலை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம்...

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...

கோவையில் பட்டபகலில் கார் மீது கல்வீச்சு தாக்குதல் - சிசிடிவி காட்சி வெளியானது

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது ஹெல்மெட் அணிந்த நபர் பட்டபகலில் கல்...