திருப்பூர் அருகே பெண்ணின் தலையில் கல்லை போட்டு கொலை செய்து பாலியல் வன்புணர்வு - பரபரப்பு!

திருப்பூர் அவிநாசி மங்கலம் புறவழி சாலையோரம் தூங்கிக் கொண்டிருந்த ஆதரவற்ற பெண்ணின் தலையில் கல்லை போட்டு கொலை செய்து பாலியல் வன்புணர்வு செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



திருப்பூர்: அவிநாசி மங்கலம் புறவழிச் சாலையில் படுத்துறங்கிய பெண்ணின் தலையில் கல்லை போட்டு கொலை செய்து விட்டு, பாலியல் வன்புணர்வு செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் அவிநாசி மங்கலம் புறவழிச் சாலை அருகேயுள்ள கடை முன்பாக ஆதரவற்ற நிலையில் பெண் ஒருவர் தூங்கிக் கொண்டிருந்துள்ளார். நேற்று இரவு கடைக்கு வெளியே தூங்கிக் கொண்டிருந்த பெண்ணின் அருகே கல்லை தூக்கி கொண்டு வந்த நபர் ஒருவர் பெண்ணின் தலையில் கல்லை போட்டு கொலை செய்துள்ளார்.



ரத்த வெள்ளத்தில் கிடந்த பெண்ணை அருகில் உள்ள பயன்பாட்டில் இல்லாத மழை நீர் வடிகாலுக்கு இழுத்துச் சென்று பாலியல் வன்புணர்வு செய்ததாக தெரிகிறது.



இந்நிலையில், காலையில் சடலத்தை மீட்ட அவிநாசி போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் கொலையான பெண் ஆதரவற்ற நிலையில் மனநலம் பாதிக்கப்பட்டு இருந்திருக்கலாம்.

இதனை அறிந்த நபர் ஒருவர் வன்புணர்வு செய்வதற்காக கொலை செய்திருக்கலாம் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் பிரேத பரிசோதனைக்கு பின் வன்புணர்வு செய்யப்பட்டாரா என்பது முழுமையாக தெரியவரும். மேலும், கடையில் இருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...