ராணுவ வீரர்களை யோகா பயிற்றுநர்களாக மாற்றி காட்டிய ஈஷா - 15 நாள்‌ ஹத யோகா பயிற்சி வெற்றிகரமாக நிறைவு!

84 தரைப்படை வீரர்கள்‌ மற்றும்‌ 20 கப்பற்படை வீரர்கள்‌ உட்பட 104 இந்திய பாதுகாப்புப்‌ படை வீரர்கள்‌ கோவை ஈஷா யோக மையத்தில்‌ 15 நாள்‌ ஹத யோகா பயிற்றுநர்‌ பயிற்சியை செப்‌டம்பர் 15ஆம் தேதி வெற்றிகரமாக நிறைவு செய்தனர்‌.


கோவை: ஈஷா யோகா மையம் சார்பில் ராணுவ வீரர்களுக்கு யோகா பயிற்றுநராக்கும் 15 நாள் பயிற்சி வெற்றிகரமாக நிறைவு பெற்றது.

இந்திய ராணுவத்தின்‌ தெற்கு பிராந்திய படைப்‌ பிரிவும்‌, ஈஷா யோக மையமும்‌ இணைந்து நடத்தும்‌ ராணுவ வீரர்களுக்கான சிறப்பு யோகா வகுப்புகள்‌ கடந்த சுதந்திர தினத்தன்று ஆகஸ்டு 15ஆம் தேதி தொடங்கப்பட்டது.

இந்த திட்டத்தின்‌ மூலம்‌ சென்னை, பெங்களுரு, செகந்தராபாத்‌, மும்பை, புனே, அகமதாபாத்‌, குவாலியர்‌, ஜான்சி உள்ளிட்ட இடங்களில்‌ பணியாற்றும்‌ சுமார்‌ 10,000 ராணுவ விரர்களுக்கு ஈஷா ஹத யோகா ஆசிரியர்கள்‌ இலவசமாக யோகா கற்றுக்கொடுத்தனர்‌.



இதன்‌ அடுத்தகட்டமாக, ராணுவ வீரர்களையே ஹத யோகா பயிற்றுநர்களாக மாற்றும்‌ 15 நாள்‌ ஹத யோகா பயிற்றுநர்‌ வகுப்பு கோவை ஈஷா யோக மையத்தில்‌ செப்‌.1-ம்‌ தேதி முதல்‌ செப்‌.15-ம்‌ தேதி வரை நடைபெற்றது.



இதில்‌ தரைப்படையின்‌ தெற்கு பிராந்திய படைப்‌ பிரிவில்‌ பல்வேறு இடங்களில்‌ பணியாற்றும்‌ 84 ராணுவ வீரர்கள்‌ மற்றும்‌ விசாகப்பட்டினம்‌, கொச்சின்‌, டெல்லி, அந்தமான்‌ நிக்கோபார்‌ தீவு ஆகிய இடங்களில்‌ பணியாற்றும்‌ 20 கப்பற்படை வீரர்கள்‌ பங்கேற்றனர்‌.

அவர்களுக்கு சூர்ய க்ரியா, அங்கமர்த்தனா மற்றும்‌ உப யோகா வகுப்புகள்‌ கற்றுக் கொடுக்கப்பட்டது. மேலும்‌, அவர்கள்‌ தங்கள்‌ படைப்‌ பிரிவுக்கு சென்று அங்குள்ள மற்ற வீரர்களுக்கு யோகா கற்றுக்கொடுப்பதற்கான பயிற்சியும்‌ வழங்கப்பட்டது.

இவ்வகுப்பில்‌ கற்றுக்கொண்ட யோக பயிற்சிகளை ராணுவ விரர்கள்‌ தினமும்‌ செய்வதன்‌ மூலம்‌ தங்கள்‌ பணியில்‌ எதிர்கொள்ளும்‌ சவால்கள்‌ மற்றும்‌ அழுத்தங்களை சிறப்பாக கையாள முடியும்‌.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...