துடியலூரில் 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு - 50க்கும் மேற்பட்ட மாநகராட்சி ஊழியர்கள் பணியில் ஈடுபட்டனர்

கோவை துடியலூரில் இந்து அமைப்புகள் சார்பில் வைக்கப்பட்டிருந்த 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் வெள்ளக்கிணர் பகுதியில் செயற்கையாக வெட்ட குளத்தில் போட்டு கரைக்கப்பட்டன.



கோவை: 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புடன் செயற்கையாக வெட்டப்பட்ட குளத்தில் 50க்கும் மேற்பட்ட மாநகராட்சி ஊழியர்கள் விநாயகர் சிலைகளை கரைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

கோவை துடியலூர் சுற்றுப்பகுதிகளில் இந்து அமைப்புகள் சார்பில் வைக்கப்பட்டிருந்த 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் வெள்ளக்கிணர் பகுதியில் மாநகராட்சி சார்பில் செயற்கையாக குளம் வெட்டி அதில் 60 லாரிகள் மூலம் தண்ணீர் விட்டும் 2 போர்வெல் மூலம் கடந்த ஒரு வாரமாக தண்ணீர் விட்டும் சுமார் 15 லட்சம் லிட்டர் தண்ணீரில் காவல் துணை ஆணையர் தலைமையில் 500 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன.

விநாயகர் சதுர்த்தி விழாவையோட்டி கோவை துடியலூர் சுற்றுப் பகுதிகளில் பல்வேறு இந்து அமைப்புகள் சார்பாக 300க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.



அதனை தொடர்ந்து விசர்ஜன ஊர்வலம் நடைபெற்றது.



இதில் இந்து முன்னணி சார்பாக விசர்ஜன ஊர்வல பொதுக்கூட்டம் நடைபெற்றது.



இந்த கூட்டத்தில் பி.ஜே.பி கட்சி மாநில செயலாளர் அஸ்வத்தாமன் சிறப்புரையாற்றினார். விசர்சன ஊர்வலத்தை பி.ஜே.பி கட்சி மாவட்ட துணை தலைவர் செந்தூர் முருகேசன் தொடங்கி வைத்தார்.



கேரளா செண்டைமேளம், டோல் மற்றும் ஜமாப்புடன் ஊர்வலமாக வந்து சிலைகளை கரைத்தனர்.



அதில் இந்து முன்னணி சார்பாக 265 விநாயகர் சிலைகளும், இந்துமக்கள் கட்சி, விஷ்வ ஹிந்து பர்சத், அனுமன் சேனா, பாரத் சேனா, ஹிந்து பாரத் சேனா, அகிலபாரத இந்து மகா மற்றும் பொதுமக்கள் சிலைகள் என 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன.

மேலும் வெள்ளக்கிணர் குட்டையில் நீர் இல்லாத காரணத்தால் மாநகராட்சி சார்பில் செயற்காக குளம் வெட்டி அதில் 60 லாரிகள் மூலம் தண்ணீர் நிரப்பப்பட்டும், 2 போர்வெல் மூலம் ஒரு வாரம் நேரடியாக தண்ணீர் விட்டும்.



சுமார் 15 லட்சம் லிட்டர் தண்ணீரில் சிலைகள் கரைக்கபட்டன.



கோவை மாநகர துணை காவல் ஆணையர் சந்தீஸ் தலைமையில் 500க்கும் மேற்பட்ட போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.



மாநகராட்சி சார்பாக 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள் விநாயகர் கரைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

Newsletter

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...

கோவை-அவிநாசி சாலையில் புதிய போக்குவரத்து சிக்னல்கள்: இன்று சோதனை ஓட்டம் தொடக்கம்

கோவை-அவிநாசி சாலையில் ESSO Bank மற்றும் Pioneer Mill சந்திப்புகளில் அமைக்கப்பட்ட புதிய தானியங்கி போக்குவரத்து சிக்னல்கள்...

கோவையில் மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 4782 வழக்குகளுக்கு தீர்வு, ரூ.1.11 கோடி இழப்பீடு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4782 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் உயிரிழந்த இரு கு...

கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-இல் அறிவிப்பு

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-ஆம் தேதி புதன்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹால் கூட்ட அரங்கில...