திருப்பூரில் விநாயகர் சதுர்த்தி விசர்ஜன ஊர்வலம் -1001 விநாயகர் சிலைகள் கரைப்பு

திருப்பூரில் இந்து முன்னணி சார்பில் ஆயிரத்து ஒரு பிள்ளையார் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு சமளாபுரம் பகுதியில் உள்ள நீர் நிலையில் கரைக்கப்பட்டன.



திருப்பூர்: பிரம்மாண்டமான 10 அடி உயர ஆஞ்சநேயர் சிலை, 20 அடி உயர பிரம்மாண்ட விநாயகர் சிலை என ஆயிரத்து ஒரு விநாயகர் சிலைகளை இந்து முன்னணியினர் ஊர்வலமாக எடுத்துச் சென்றனர்.



திருப்பூர் மாநகரில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கடந்த 18ஆம் தேதி இந்து முன்னணி சார்பில் 1001 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று, சிறப்பு வழிபாடுகள் செய்யபட்டன.

அதனைத் தொடர்ந்து விநாயகர் சதுர்த்தி விசர்சன ஊர்வலம் மூன்று இடங்களில் இருந்து புறப்பட்டது.



அதில் பிரம்மாண்டமான 10 அடி உயர ஆஞ்சநேயர் சிலை, 20 அடி உயர பிரம்மாண்ட விநாயகர் சிலைகள், உள்ளடக்கிய ஆயிரத்தி ஒரு விநாயகர் சிலைகள், புதிய பேருந்து நிலையம், தாராபுரம் ரோடு, செல்லம் நகர் ஆகிய மூன்று இடங்களில் இருந்து புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக சென்று ஆலங்காடு பகுதியில் நிறைவடைந்தது.

அதனைத் தொடர்ந்து அங்கு பொதுக்கூட்டம் நடைபெற்றது. பின்னர் அனைத்து சிலைகளும் மங்களம் சாலை வழியாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு சமளாபுரம் பகுதியில் உள்ள நீர் நிலையில் கரைக்கப்பட்டன.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...