கோவையில் மீண்டும் போட்டியிடத் தயார் - மண்டல நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டத்தில் கமல்ஹாசன் அறிவிப்பு

கோவை கொடிசியா அருகே உள்ள நட்சத்திர ஹோட்டலில் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், கோவையில் மீண்டும் போட்டியிடுவதாக தெரிவித்தார்.



கோவை: கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு உள்ளிட்ட கோவை மண்டல நிர்வாகிகளுடன் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஆலோசனை நடத்தினார்.

திரைப்பட நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமலஹாசன் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் கோவை வந்தடைந்தார். அவருக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.



இதனைத் தொடர்ந்து கோவை கொடிசியா அருகே உள்ள நட்சத்திர ஹோட்டலில் மக்கள் நீதி மய்யத்தின் கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு உள்ளிட்ட கோவை மண்டல நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.

அக்கட்சியின் தலைவர் கமலஹாசன் தலைமையில் நடைபெற்று வரும் ஆலோசனை கூட்டத்தில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராவது உள்ளிட்ட பல்வேறு முக்கியமான விசயங்கள் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.



இந்த கூட்டத்தில் சுமார் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.



கூட்டத்தில் பேசிய கமல்ஹாசன்,தேர்தலில் போட்டியிட பல்வேறு இடங்களில் இருந்து அழைப்பு வருகிறது. பழிக்கு பழிவாங்க வேண்டும் என கோவையில் அழைக்கிறார்கள். சென்னையிலும் அழைக்கிறார்கள். கோவைக்கு அழைத்தால் மட்டும் போதாது. வேலை செய்ய 40 ஆயிரம் பேரை ரெடி செய்ய வேண்டும் . விக்ரம்க்கு கூட்டம் சேர்ந்தது. மநீம விற்கு கூட்டம் சேரவில்லை என்று சொல்வதை நம்ப முடியுமா? .எனக்கு மூக்கு உடைந்தால் பரவாயில்லை. மருந்து போட்டு வந்து கோவையில் மீண்டும் நிற்கிறேன் என்று ஆலோசனைக்கூட்டத்தில் பேசினார்.

Newsletter

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...