பல்லடம் நான்கு பேர் கொலை வழக்கின் குற்றவாளிகள் நான்கு பேர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது

பல்லடம் அருகே கள்ளக்கிணறு கிராமத்தில் கடந்த மூன்றாம் தேதி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நான்கு பேர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.



திருப்பூர்: நான்கு குற்றவாளிகள் மீது திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாமிநாதன் பரிந்துரையின் படி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் பிறப்பித்த உத்தரவுப்படி நான்கு பேரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.



திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கள்ளக்கிணறு கிராமத்தில் கடந்த மூன்றாம் தேதி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நெல்லை மாவட்டத்தை சேர்ந்த குட்டி என்கின்ற வெங்கடேஷ், அவரது தந்தை ஐயப்பன், திருச்சி மாவட்டம் மணப்பாறையை சேர்ந்த செல்லமுத்து, மற்றும் தேனி மாவட்டத்தை சேர்ந்த சோனை முத்தையா ஆகிய நான்கு குற்றவாளிகள் மீது திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாமிநாதன் பரிந்துரையின் படி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் பிறப்பித்த உத்தரவுப்படி நான்கு பேரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விசாரணையின் போது தப்பிக்க முயன்ற மனப்பாறையை சேர்ந்த செல்லமுத்து கால் முறிவு ஏற்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த வெங்கடேஷ் தப்பிக்க முயன்ற போது சுட்டுப் பிடிக்கப்பட்டு இரண்டு கால் முட்டிகளிலும் காயம் ஏற்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், நெல்லை மாவட்டத்தை சேர்ந்த ஐயப்பன் தேனி மாவட்டத்தை சேர்ந்த சோனை முத்தையா மற்றும் குற்றவாளிக்கு அடைக்கலம் கொடுத்ததாக கைது செய்யப்பட்ட ராஜ்குமார் ஆகிய மூவரும் சிறையில் உள்ளனர்.

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான குட்டி என்கிற வெங்கடேஷ், செல்லமுத்து, ஐயப்பன், மற்றும் சோனை முத்தையா ஆகிய நான்கு பேர் மீதும் திருப்பூர் மாவட்ட ஆட்சியரின் உத்தரவுப்படி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...