விஷால் மீது குற்றம்சாட்டுவதை சேரன் நிறுத்திக்கொண்டு படம் எடுப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என மிஷ்கின் சாடல்

விஷால் மீது குற்றம்சாட்டுவதை சேரன் நிறுத்திக்கொண்டு படம் எடுப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என கோவையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் மிஷ்கின் தெரிவித்தார்.

தயாரிப்பாளர் சங்க தேர்தலில் போட்டியிடும் விஷால் அணியான நம்ம அணி சார்பாக கோவையில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் விஷால், மிஷ்கின், ஞானவேல் ராஜா, பிரபு உள்ளிட்டோர் கலந்துகொண்டர்.

அப்போது செய்தியாளர் சந்திப்பில் பேசிய விஷால், 10 ஆண்டுகளாக தயாரிப்பாளர்களின் நலனுக்காக குரல் கொடுத்து எவ்வித முன்னேற்றமும் இல்லாத காரணத்தால் இந்த அணி தற்போது போட்டியிட போவதாகவும், இது தொடர்பாக கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த தயாரிப்பாளர்களை சந்திக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்த சந்திப்பு வெறும் தேர்தலுக்கான பிரச்சாரமாக மட்டும் இல்லாமல், சிதறிக்கிடக்கும் தயாரிப்பாளர்களை ஒன்றிணைத்து, தயாரிப்பாளர்களுக்கான ஒரு கட்டமைப்பை உருவாக்கி, தயாரிப்பாளர்கள் நலத்திட்டங்கள் குறித்து எடுத்துரைக்கப்படும் என தெரிவித்தார்.

இதனையடுத்து விஷாலின் தேர்தல் பிரச்சாரம் குறித்து சேரனின் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்த மிஷ்கின், மூத்த தயாரிப்பாளரான சேரன் ஏன் இவ்வாறு தனி மனிதனை தாக்குகிறார் என தெரியவில்லை எனவும், இது போன்று விஷால் மீது சொல்லப்படும் குற்றச்சாட்டுகள் வருத்தம் அளிப்பதாகவும் கூறினார்.

சேரன் மீதும் குற்றச்சாட்டுகள் உள்ளதாகவும், அதனை தெரிவிக்க விரும்பவில்லை எனக் கூறி மிஷ்கின், திரையுலகிற்கு நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கிலேயே தேர்தலில் களமிறங்கி உள்ளதாகவும், சேரன் குற்றச்சாட்டுவதை நிறுத்தி விட்டு, படம் எடுப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.

இதனை தொடர்ந்து பேசிய தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, நடிகர் சங்கத்தில் விஷால் பொறுப்பேற்ற பின்னர், அவர்கள் அளித்த வாக்குறுதியில் 90 சதவிகிதம் நிறைவேற்றப்பட்டுவிட்டதாகவும், இன்னும் சில நாட்களில் நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெறும் என தெரிவித்தார்.

இது போன்று தயாரிப்பளர் சங்க கோரிக்கைகளையும் நிறைவேற்றவே விஷாலை இத்தேர்தலில் ஆதரித்துள்ளதாகவும், ஒரு ஆண்டிற்குள் வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் பதவியில் இருந்து ராஜினாமா செய்வோம் எனவும் தெரிவித்தார்.

மேலும் திரையரங்குகள் அமைக்க அரசு சார்பாக அனுமதி வழங்குவதில் காலதாமதம் ஏற்படுவதன் காரணமாக வட மாநிலங்களிடம் ஒப்பிடுகையில் மிக குறைந்த அளவிலான திரையரங்குகளே தமிழகத்தில் செயல்பட்டு வருவதாக தெரிவித்தவர். இதானால் வீடியோ பைரசியில் ஏற்படும் இழப்பு போல, குறைந்த திரையரங்குகளாலும் வருவாயை இழக்க நேரிடுவதாக கூறினார்.

இதே போன்ற சிக்கல்களை தீர்க்க அரசு சார்பில் நடவடிக்கை எடுக்க சங்கம் சார்பாக கோரிக்கை வைக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

Newsletter

பொள்ளாச்சி அருகே திருடிய நகைகளை விற்று காதலனுக்கு பைக் பரிசளித்த கல்லூரி மாணவி கைது

பொள்ளாச்சி அருகே குடும்ப நண்பரின் வீட்டில் 9 பவுன் தங்க நகைகளை திருடிய வழக்கில் 19 வயது கல்லூரி மாணவியை போலீசார் கைது செ...

கோவையில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் கிருஷ்ண ஜெயந்தி விழா; ராதை, கிருஷ்ணர் வேடமிட்டு குழந்தைகள் ஊர்வலம்

கோவை விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் 14-ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா விமரிசையாக நடைபெற்றது. சாஸ்திரி ரோட்டில் இருந்து சிவ...

Palakkad–Tiruchchirappalli Express to Be Short-Terminated at Pugalur on Four Days

The Palakkad Town–Tiruchchirappalli Express will be short-terminated at Pugalur on September 5, 8, 10 and 12 due to slee...

“விஜய் பிரதமர் வேட்பாளரா? – என்னை சிக்கலில் விட்டுவிடாதீர்கள்”: கோவையில் செங்கோட்டையன் பதில்

கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் பல்வேறு துறைகளுக்கான அறிவிப்புக...

Coimbatore–Nagercoil Express to Run on Diverted Route via Podanur, Poallchi

The Coimbatore–Nagercoil Express will operate on a diverted route on September 5, 8, 10 and 12 due to sleeper renewal an...

கோவையில் 15 அடி உயரத்தில் இருந்து தொழிலாளி தவறி விழுந்து காயம்; பாதுகாப்பு வசதிகள் குறித்து புகார்

கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் சுமார் 15 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்து பலத்த காயமடைந்த தொ...