சூலூரில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழி - ஆகழ்வாராய்வு பணியில் தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள்

கோவை மாவட்டம் சூலூர் அருகே கிடைத்த எலும்பு கூடுகள் நிறைந்த முதுமக்கள் தாழியை தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் அகழ்வாராய்ச்சி செய்து வருகின்றனர்.



கோவை: கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள காளியாபுரம் பகுதியில் பொன்னுச்சாமி என்பவர் கடந்த 60 வருடங்களாக அப்பகுதியில் வசித்து வருகிறார்.



பழைய வீடாக இருந்த அவருடைய வீட்டை புதுப்பித்து புதிய வீடு கட்டி வருகிறார். அதற்காக குடிநீர் தொட்டி தோண்டும் போது தோண்டப்பட்ட இடத்தில் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த முதுமக்கள் தாழி ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இதனை எடுத்த பொன்னுச்சாமி இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரிகளிடமும் தொல்பொருள் ஆராய்ச்சி அலுவலர்களிடமும் தெரிவித்துள்ளார்.



உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் 2000ம் ஆண்டு பழமை வாய்ந்த அகழ்வாராய்ச்சி செய்யும் பணியினை மேற்கொண்டனர்.



இந்த முதுமக்கள் தாளியுடன் செப்பு சாமான்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தாளியில் இறந்தவரின் எலும்பு கூடுகளும் இருந்துள்ளது.

இதனை தொல்பொருள் அகழ்வாராய்ச்சியாளர்கள் கோவையில் உள்ள தொல்பொருள் அருங்காட்சியத்திற்கு எடுத்துச் சென்று ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளனர். எலும்புகூடுகள் கண்டெடுக்கப்படிருப்பது இப்பகுதியில் உள்ள பொது மக்களிடையே பரவி ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து பொன்னுச்சாமி பேசும்போது, 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த தொன்மை வாய்ந்த முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்டுள்ளது வீடு கட்டுவதற்காக குழி தோண்டும் போது கிடைத்துள்ளது என தெரிவித்தார்.

வருவாய்த்துறை அதிகாரிகள் பேசும் போது, 2000 ஆண்டு பழமை வாய்ந்த முதுமக்கள் தாழி இங்கு கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதனை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்த முதுமக்கள் தாலியை கோவையில் உள்ள தொல்பொருள் ஆராய்ச்சி அருங்காட்சியத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவித்தனர்.

Newsletter

தேக்கம்பட்டியில் மீண்டும் கோயில் யானைகள் புத்துணர்வு முகாம்: முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்த அதிகாரிகள்

தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையில் மீண்டும் நடைபெறவுள்ள கோயில் யானைகள் புத்துணர்வு முகாமை முன்னிட்டு, இந்து சமய அறநிலையத்த...

கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பு முதியவர் தர்ணா; அரசு மருத்துவமனை குறித்து புகார்

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தின்போது, அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கப்படவ...

ஜூன் இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு சாய்பாபா காலனி மேம்பாலம் திறக்கப்படும்: அமைச்சர் சம்பத்குமார்

கோவையில் ரூ.71 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை அமைச்சர் வி. சம்பத்குமார் ஆய்வு செ...

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே ரேஷன் அரிசி கடத்தல்..? 50 மூட்டைகளுடன் சிக்கிய மினி லாரி.

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே ரேஷன் அரிசி கடத்தப்பட்டதாக கிடைத்த தகவலின் பேரில் மினி லாரி ஒன்று மடக்கிப் பிடிக்கப்பட்ட...

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...