வால்பாறையில் மாலை தொடங்கி இரவு வரை கரைக்கப்பட்ட விநாயகர் சிலைகள்

கோவை மாவட்டம் வால்பாறையில் விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு இந்து முன்னணி அமைப்பினர் சார்பில் வைக்கப்பட்ட சிலைகள் அனைத்தும் இரவு நேரத்திலும் போலீஸ் பாதுகாப்புடன் கரைக்கப்பட்டன.



கோவை: விநாயகர் சதூர்த்தி திருவிழாவையொட்டி இந்து முன்னணி அமைப்பினர் சார்பாக கோவை மாவட்டம் வால்பாறை பகுதிகளில் 108 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டிருந்தன.



அவ்வாறு பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த, சிலைகள் எஸ்டேட் பகுதிகளில் இருந்து வாகனங்கள் மூலம் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன.



அப்போது வால்பாறையில் உள்ள சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு, சிறப்பு பூஜை செய்யப்பட்டு வால்பாறை பிரதான சாலை வழியாக ஆடல், பாடல், நடனமாடி சிலைலை ஊர்வலமாக கொண்டு சென்றனர்.



இரவு 9 மணி அளவில் நடுமலை எஸ்டேட் பகுதியில் உள்ள, ஆற்றில் கிரேன் மூலம் விநாயகர் சிலைகள் அனைத்தும் கரைக்கப்பட்டன.

விநாயகர் சிலை கரைக்கும் நிகழ்வை பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர். 300க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...