கே.எம்.சி.எச் மருத்துவமனையில் முளைச்சாவடைந்த ஹோட்டல் உரிமையாளர் 7 பேருக்கு மறுவாழ்வு அளித்தார்

ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி தாலுகா கோவிந்த நாய்க்கன்பாளையத்தை சேர்ந்த திரு.தாமோதரன் (வயது 40 ) இவர் ஈரோடு பேருந்து நிலையம் அருகில் ஹோட்டல் நடத்திவருகிறார். இவர் கடந்த 13-ஆம் தேதி அதிகாலையில் 12.15 மணிக்கு ரோட்டை கடக்க முயன்ற போது எதிர்பாராத விதமாக கார் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட திரு.தாமோதரன் அவர்கள் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை உடனடியாக ஈரோடு கே.எம்.சி.எச். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. .பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக கோவை கே.எம்.சி.எச். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்தபோதிலும் அவரது உடல் நிலையில் எந்த வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.   

இந்த நிலையில் கடந்த 14-ஆம் தேதி அவருக்கு மூளைச் சாவு எற்பட்டது . அதனைத் தொடர்ந்து அவரது உறவினர் ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி தாலுகா கோவிந்த நாய்க்கன்பாளையம் குளுர் கிராமத்தை சேர்ந்த திரு.செந்தில்குமார் அவர்கள்  திரு.தாமோதரன்  உடல் உறுப்புகளை தானம் செய்ய முன் வந்தார். அவரது இதயம், கண்கள், கல்லீரல், தோல்ம ற்றும் சிறுநீரகங்கள் ஆகியவை தானமாக பெறப்பட்டடு, கல்லீரல் மற்றும் சிறுநீரகம் கே.எம்.சி.எச். மருத்துவமனைக்கும்,, கண்கள் அரவிந்த்ம ருத்துவமனைக்கும், தோல் கங்கா மருத்துவமனைக்கும், இதயம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும்  வழங்கப்பட்டது.

இது குறித்து கே.எம்.சி.எச். மருத்துவமனை தலைவர் நல்ல G பழனிசாமி  கூறுகையில், மக்களிடையே உடல் உறுப்பு தானம் குறித்து அதிக விழிப்புணர்வு தேவைப்படுகிறது. ஒருவர் இறந்த பிறகு அவரது உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டால் அது பலரது உயிரைக் காப்பாற்ற உதவும். பின்னர் உடல் உறுப்பு தானம் வழங்கிய திரு.தாமோதரன் குடும்பத்திற்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும்  கூறினார்.

Newsletter

பொள்ளாச்சி அருகே திருடிய நகைகளை விற்று காதலனுக்கு பைக் பரிசளித்த கல்லூரி மாணவி கைது

பொள்ளாச்சி அருகே குடும்ப நண்பரின் வீட்டில் 9 பவுன் தங்க நகைகளை திருடிய வழக்கில் 19 வயது கல்லூரி மாணவியை போலீசார் கைது செ...

கோவையில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் கிருஷ்ண ஜெயந்தி விழா; ராதை, கிருஷ்ணர் வேடமிட்டு குழந்தைகள் ஊர்வலம்

கோவை விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் 14-ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா விமரிசையாக நடைபெற்றது. சாஸ்திரி ரோட்டில் இருந்து சிவ...

Palakkad–Tiruchchirappalli Express to Be Short-Terminated at Pugalur on Four Days

The Palakkad Town–Tiruchchirappalli Express will be short-terminated at Pugalur on September 5, 8, 10 and 12 due to slee...

“விஜய் பிரதமர் வேட்பாளரா? – என்னை சிக்கலில் விட்டுவிடாதீர்கள்”: கோவையில் செங்கோட்டையன் பதில்

கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் பல்வேறு துறைகளுக்கான அறிவிப்புக...

Coimbatore–Nagercoil Express to Run on Diverted Route via Podanur, Poallchi

The Coimbatore–Nagercoil Express will operate on a diverted route on September 5, 8, 10 and 12 due to sleeper renewal an...

கோவையில் 15 அடி உயரத்தில் இருந்து தொழிலாளி தவறி விழுந்து காயம்; பாதுகாப்பு வசதிகள் குறித்து புகார்

கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் சுமார் 15 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்து பலத்த காயமடைந்த தொ...