நாமக்கல்லில் நடைபெறும் சூதாட்ட விடுதி - கோவை மேற்கு மண்டல ஐஜி அலுவலகத்தில் தமிழ் புலிகள் கட்சி மனு

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அரவங்காடு குடியிருப்பு பகுதியில் நடைபெறும் ராயல் ரெக்ரியேசன் கிளப் என்ற சூதாட்ட விடுதியால் மக்கள் பாதிக்கப்படுவதாக கோவை மேற்கு மண்டல ஐஜி அலுவலகத்தில் தமிழ் புலிகள் கட்சியினர் மனு அளித்துள்ளனர்.


கோவை: ஈரோட்டை சேர்ந்த அதிமுக பிரமுகர் மற்றும் பவானியை சேர்ந்த அதிமுக பிரமுகர் இணைந்து நடத்தி வரும் சூதாட்ட விடுதியால் கிராம மக்கள் பாதிக்கப்படுவதாக தமிழ் புலிகள் கட்சியினர் புகார் தெரிவித்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அரவங்காடு குடியிருப்பு பகுதியில் ராயல் ரெக்ரியேசன் கிளப் என்ற சூதாட்ட விடுதி நடைபெற்று வருவதாகவும் இதனால் அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தமிழ் புலிகள் கட்சியின் சார்பில் கோவை மேற்கு மண்டல ஐஜி அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அவர்கள் அளித்துள்ள மனுவில் "அந்த சூதாட்ட விடுதியை ஈரோட்டை சேர்ந்த அதிமுக பிரமுகர் மற்றும் பவானியை சேர்ந்த அதிமுக பிரமுகர் இணைந்து நடத்தி வருவதாகவும், அங்கு நாள்தோறும் சீட் ஆடுவதற்கு வெளி ஊர்களில் இருந்து வரும் நபர்களால் கிராம மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாவதாக குறிப்பிட்டுள்ளனர். மேலும் தங்கள் கிராம மக்களையும் சீட்டு ஆடுவதற்கு அழைப்பதால் பலரும் வேலைகளுக்கு செல்லாமல் சீட்டு ஆடுவதற்கு செல்வதாக குறிப்பிட்டுள்ள அவர்கள் இதனால் பணங்களை இழந்து விடுவதாக குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் அந்த சூதாட்ட கிளப் நடைபெறும் இடத்திற்கு அருகிலேயே அரவங்காடு அரசு பள்ளிக்கூடம் இருப்பதால் பள்ளி குழந்தைகள் பாதிக்கப்படுவதாகவும், அவ்வழியாக செல்லும் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் அச்சமாக இருப்பதாகவும் இது பற்றி பலமுறை காவல் நிலையத்தில் புகார் தெரிவித்த நிலையில் எவ்வித நடவடிக்கையும் இல்லாததால் மேற்கு மண்டல காவல்துறை தலைவர் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.

Newsletter

“தப்பாட்டம் என்கிட்ட ஆடாதே….”- திருப்பூரில் முதல்வர் மு.க ஸ்டாலின் பரப்புரை..!

திருப்பூர் மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சார கூட்டத்தில் கலந்து க...

பிரதமர் மோடி கோவை வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம், 3,000 போலீசார் குவிப்பு..!

தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக இன்று மாலை கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில்...

கொடீசியாவில் இன்று மோடி-எடப்பாடி பழனிசாமி பிரம்மாண்ட பொதுக்கூட்டம்

கோயம்புத்தூர் கொடீசியா மைதானத்தில் இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்க...

“இபிஎஸ், வேலுமணி மக்கள் தீர்ப்பை சந்திப்பார்கள்” - கோவையில் செங்கோட்டையன் கடும் விமர்சனம்..!

கோவை தெற்கு தொகுதியில் தவெக வேட்பாளர் செந்தில்குமாரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட தவெக நிர்வாகி செங்கோட்டையன், எடப்பாடி...

கோவையில் “Oceans of Knowledge” நூல் வெளியீட்டு விழா..!

பிரபல கடல்சார் விஞ்ஞானி டாக்டர் ஆர்.எஸ். லால் மோகனின் வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்த “Oceans of Knowledge” நூல் கோவையில்...

கோவையில் “Oceans of Knowledge” நூல் வெளியீட்டு விழா..!

பிரபல கடல்சார் விஞ்ஞானி டாக்டர் ஆர்.எஸ். லால் மோகனின் வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்த “Oceans of Knowledge” நூல் கோவையில்...