பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகல் - தேசிய தலைமை பேசும் என அண்ணாமலை அறிவிப்பு

தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியிருக்கும் நிலையில் அது குறித்து பாஜக தேசிய தலைமை கருத்து தெரிவிக்கும் என கோவையில் நடைபயணம் மேற்கொண்ட தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.



கோவை: சென்னையில் இன்று நடைபெற்ற எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக இன்று முதல் பாரதிய ஜனதா கட்சியிலிருந்தும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்தும் விலகிக் கொள்கிறது என்று ஏகமனதாக தீர்மானிக்கப்படுகிறது என அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இது குறித்து கோவையில் என் மண் என் மக்கள் யாத்திரையின் இடையே செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அதிமுக வின் அறிக்கையை படித்தோம் அதில் அவர்கள் ஒரு தீர்மானத்தை அறிவித்துள்ளனர். இது குறித்து எங்களுடைய தேசிய தலைமை சரியான நேரத்தில் பேசுவார்கள் எனவும் அதன் பிறகு பத்திரிகையாளர்களை சந்திக்கும் போது இது குறித்து விரிவாக பேசுவோம் என தெரிவித்தார்.

இச்செய்தியாளர் சந்திப்பில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், எல்.முருகன் ஆகியோர் உடன் இருந்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...