கவுண்டச்சிபுதூரில் தீ விபத்து - இரண்டு மணி நேரம் போராடி தீயை கட்டுப்படுத்திய தீயணைப்புத்துறையினர்

கவுண்டச்சிப்புதூர் பகுதியில் குப்பைகளை தூய்மை பணியாளர்கள் தீயிட்டு கொளுத்தியபோது, அதில் இருந்து பரவிய தீயால் விவசாயி வைத்திருந்த வைக்கபோர் மளமளவென தீப்பிடித்து எரிந்தது. இந்த தீயை இரண்டு மணி நேரம் போராடி தீயணைப்புத்துறையினர் கட்டுப்படுத்தினர்.


திருப்பூர்: பெரும் விபத்து ஏற்படும் முன்பே இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் சார்பாக வைக்கப்பட்டுள்ள பெட்ரோல் பங்கை உடனடியாக மாற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த கவுண்டச்சிப்புதூர் பஞ்சாயத்து பகுதியில் உள்ள ராம்நகர் குடியிருப்பு பகுதியில் மத்தியில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் சார்பில் இந்தியன் ஆயில் பெட்ரோல் டீசல் விற்பனைநிலையம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் ஒட்டிய பகுதி முழுவதும் குடியிருப்பு பகுதிகள் உள்ளன. விவசாய நிலங்களும் உள்ளன.

அங்கு கால்நடைகளுக்கு உண்டான தீவனங்கள் வைக்க போல் அதிகளவில் வைக்கப்பட்டுள்ளதால் ஆடு, மாடுகள் மேய்ந்து வருகின்றன. இந்த நிலையில் கவுண்டச்சிப்புதூர் பஞ்சாயத்து பகுதியில் துப்புரவு பணியாளர்கள் குப்பைகளை தூய்மைப்படுத்தி குப்பைகளை அப்புறப்படுத்தாமல் துப்புரவு பணியாளர்களே தீட்டு வந்தனர்.



அப்போது அங்கு அடித்த காற்றில் அந்த தீ பரவி அங்குள்ள விவசாயி வீட்டில் வைக்கப்பட்டிருந்த வைக்கபோர் திடீரென தீப்பற்றி எரிந்து அதிகளவில் தீ பரவியதால் அங்குள்ள பொதுமக்கள் அதனை கண்டு அதிர்ச்சி அடைந்து தாராபுரம் தீயணைப்பு துறை தொலைபேசி மூலம் தகவல் அளித்தனர்.



தகவலின் அடிப்படையில் தாராபுரம் தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெயச்சந்திரன் தலைமையில் 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று அங்குள்ள தீயினை சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்து வந்தனர்.

அங்குள்ள பொதுமக்கள் அந்த இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் சார்பாக வைக்கப்பட்டுள்ள பெட்ரோல் பங்கை உடனடியாக மாற்றி தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...

கோவை ஜி.டி. பாலம் கீழ் புதிய பேருந்து நிழற்குடைகள் அமைப்பது குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை அவினாசி சாலையில் அமைந்துள்ள ஜி.டி. பாலத்தின் கீழ் நிழற்குடை இல்லாத பேருந்து நிறுத்தங்களில் புதிய நிழற்குடை அமைக்கும...

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...