கவுண்டச்சிபுதூரில் தீ விபத்து - இரண்டு மணி நேரம் போராடி தீயை கட்டுப்படுத்திய தீயணைப்புத்துறையினர்

கவுண்டச்சிப்புதூர் பகுதியில் குப்பைகளை தூய்மை பணியாளர்கள் தீயிட்டு கொளுத்தியபோது, அதில் இருந்து பரவிய தீயால் விவசாயி வைத்திருந்த வைக்கபோர் மளமளவென தீப்பிடித்து எரிந்தது. இந்த தீயை இரண்டு மணி நேரம் போராடி தீயணைப்புத்துறையினர் கட்டுப்படுத்தினர்.


திருப்பூர்: பெரும் விபத்து ஏற்படும் முன்பே இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் சார்பாக வைக்கப்பட்டுள்ள பெட்ரோல் பங்கை உடனடியாக மாற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த கவுண்டச்சிப்புதூர் பஞ்சாயத்து பகுதியில் உள்ள ராம்நகர் குடியிருப்பு பகுதியில் மத்தியில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் சார்பில் இந்தியன் ஆயில் பெட்ரோல் டீசல் விற்பனைநிலையம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் ஒட்டிய பகுதி முழுவதும் குடியிருப்பு பகுதிகள் உள்ளன. விவசாய நிலங்களும் உள்ளன.

அங்கு கால்நடைகளுக்கு உண்டான தீவனங்கள் வைக்க போல் அதிகளவில் வைக்கப்பட்டுள்ளதால் ஆடு, மாடுகள் மேய்ந்து வருகின்றன. இந்த நிலையில் கவுண்டச்சிப்புதூர் பஞ்சாயத்து பகுதியில் துப்புரவு பணியாளர்கள் குப்பைகளை தூய்மைப்படுத்தி குப்பைகளை அப்புறப்படுத்தாமல் துப்புரவு பணியாளர்களே தீட்டு வந்தனர்.



அப்போது அங்கு அடித்த காற்றில் அந்த தீ பரவி அங்குள்ள விவசாயி வீட்டில் வைக்கப்பட்டிருந்த வைக்கபோர் திடீரென தீப்பற்றி எரிந்து அதிகளவில் தீ பரவியதால் அங்குள்ள பொதுமக்கள் அதனை கண்டு அதிர்ச்சி அடைந்து தாராபுரம் தீயணைப்பு துறை தொலைபேசி மூலம் தகவல் அளித்தனர்.



தகவலின் அடிப்படையில் தாராபுரம் தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெயச்சந்திரன் தலைமையில் 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று அங்குள்ள தீயினை சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்து வந்தனர்.

அங்குள்ள பொதுமக்கள் அந்த இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் சார்பாக வைக்கப்பட்டுள்ள பெட்ரோல் பங்கை உடனடியாக மாற்றி தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...