திருப்பூரில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பாக மேற்கு மண்டல போதை எதிர்ப்பு மாநாடு நடைபெற்றது

திருப்பூர் பூங்கா சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் மேற்கு மண்டல போதை எதிர்ப்பு மாநாடு நடைபெற்றது. இதில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அகில இந்திய தலைவருமான ஸ்ரீமதி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.


திருப்பூர்: இந்த மாநாட்டில் பள்ளிகள்,மத வழிபாட்டு தலங்கள், மருத்துவமனைகள் ஆகியவற்றின் அருகில் மதுபான கடைகள் இருப்பதை அகற்ற வேண்டும் என்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் நடைபெற்ற மேற்கு மண்டல போதை எதிர்ப்பு மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பாக இந்திய அளவில் போதை எதிர்ப்பு பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.



அதன் ஒரு பகுதியாக திருப்பூர் பூங்கா சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மேற்கு மண்டல போதை எதிர்ப்பு மாநாடு இன்று நடத்தப்பட்டது.

இதில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அகில இந்திய தலைவருமான ஸ்ரீமதி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.



இந்த மாநாட்டில் பள்ளிகள், மத வழிபாட்டு தலங்கள், மருத்துவமனைகள் ஆகியவற்றின் அருகில் மதுபான கடைகள் இருப்பதை அகற்ற வேண்டும். பல்வேறு வடிவங்களில் இளைஞர்களை சீரழிக்கும் வகையில் வரும் போதை பொருட்களை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்த மாநாட்டில் கோவை, ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட மேற்கு மண்டலத்தை சேர்ந்த மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...