உங்கள் டி.ஆர்.பிக்கு நான் அரசியல் பேசவேண்டுமா? - செய்தியாளர்களிடம் சீறிய அண்ணாமலை

உள்ளுர் உற்பத்தி ஆடைகளை மக்கள் விரும்பி அணிய வேண்டும் என கோவையில் ஸ்வச் பாரத் திட்டத்தின் கீழ் தூய்மைப் பணிகளை மேற்கொண்ட தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.


கோவை: பாரதப் பிரதமரின் ஸ்வச் பாரத் திட்டத்தின் கீழ் கோவையில் பாஜகவினர் தூய்மை பணியை மேற்கொண்டனர்.

தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவை கோவில்பாளையம் அடுத்த எஸ் எஸ் குளம் பகுதியில் தூய்மை பணியில் ஈடுபட்டார்.



கையில் கடப்பாரை பிடித்து குழி தோண்டி மரக்கன்றுகளை நடவு செய்த அண்ணாமலை, அங்கிருந்த நூற்றுக்கும் மேற்பட்டோருடன் இணைந்து தூய்மை பணியிலும் ஈடுபட்டார்.



முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அவர், பிரதமரின் வேண்டுகோளுக்கு இணங்க இன்று நாடு முழுவதும் அனைவரும் தூய்மை பணியில் ஈடுபட வேண்டும் எனவும் இதை தொடர்ந்து கதர் ஆடைகளை வாங்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

நான்காயிரம் கோடி என இருந்த காதி விற்பனை கடந்த 9 ஆண்டுகளில் ஒரு லட்சம் கோடியை தாண்டி விட்டதாகவும் எனவே உள்ளூர் உற்பத்தி ஆடைகளை மக்கள் விரும்பி அணிய வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.

இந்த ஒரு மணி நேரம் எந்த புகைப்படமும் செல்ஃபியும் இல்லாமல் அனைவரும் பணி மேற்கொள்ள வேண்டும் என கூறினார். அவரிடம் டெல்லி பயணம் குறித்தான கேள்விக்கு உங்கள் டிஆர்பி ஏற்றுவதற்கு நான் எதற்கு அரசியல் பேச வேண்டும் கூறி சென்றார்.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...