கோவையில் வீட்டுக்குள் பதுங்கிய சாரைப் பாம்பு - லாவகமாக பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்த பாம்புபிடி வீரர்

கோவை 100 அடி பகுதியில் சுப்பிரமணியன் என்பவரது வீட்டில் தண்ணீர் அளவிடும் மீட்டர் பாக்சில் பதுங்கிருந்த சாரைப்பாம்பை பாம்பு பிடி வீரர் லாவகமாக பிடித்தார்.


கோவை: இரண்டு வீடுகளில் இரண்டு சாரைப்பாம்புகளில் புகுந்த இரண்டு சாரைப்பாம்புகளையும் வனத்துறையினர் அடர்ந்த வனப்பகுதியில் விட்டனர்.

கோவை 100 அடி ரோடு 9"ஆவது வீதியில் குடியிருந்து வருபவர் சுப்ரமணி. இவருடைய வீட்டில் தண்ணீர் அளவிடும் மீட்டர் பாக்சில் 4"அடி நீள சாரைப்பாம்பு ஒன்று பதுங்கி இருந்தது.

இது குறித்து அவர் கொடுத்த தகவலின் பேரில் பாம்பு பிடி வீரரான சஞ்சய் விரைந்து வந்து மீட்டர் பாக்சில் பதுங்கி இருந்த பாம்பை லாவகமாக பிடித்தார்.

இதேபோல் ஜி.வி.ரெசிடென்சி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பதுங்கி இருந்த 6 அடி நீள சாரை பாம்பையும் பாம்பு பிடி வீரர் சஞ்சய் பிடித்தார். பிடிபட்ட இரண்டு பாம்புகளையும் வனத் துறையினரிடம் அவர் ஒப்படைத்தார்.

இதனையடுத்து பிடிப்பட்ட இரண்டு பாம்புகளையும் மதுக்கரையில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் வனத்துறையினர் விட்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...