சுக்கம்பாளையத்தில் கிராம சபை கூட்டம் - ஊராட்சி நிர்வாகம் சரியில்லை என கிராம மக்கள் உண்ணாநிலை

பல்லடம் அருகே சுக்கம்பாளையம் ஊராட்சியில் வரவு செலவு கணக்கு தொடர்பான ஆவணங்களை கிராம சபை கூட்டங்களில் முறையாக சமர்ப்பதில்லை என குற்றம் சாட்டிய பொதுமக்கள் உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: முறையான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் வரவு என்று கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் உண்ணாநிலையில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.



திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சுக்கம்பாளையம் ஊராட்சியில் இன்று காந்தி ஜெயந்தி முன்னிட்டு கிராம சபை கூட்டம் ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் நடைபெற்று வருகிறது.



இந்நிகழ்வில் சுக்கம்பாளையம், காளிவேலம்பட்டி, ஊஞ்சபாளையம், டிஎம்எஸ் காலனி, ஆகிய ஊர்களில் இருந்து பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



ஊராட்சி நிர்வாகத்தின் வரவு செலவு கணக்கு தொடர்பான ஆவணங்களை கிராம சபை கூட்டங்களில் முறையாக சமர்ப்பதில்லை எனவும், ஊராட்சியில் பொதுமக்களுக்கு முறையாக குடிநீர் விநியோகம் செய்வதில்லை எனவும் கடந்த இரண்டு வருடங்களில் குடிநீர் குழாய்களை பராமரிப்பதற்கு மாதத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் என்ற விதத்தில் இரண்டு வருடத்தில் 34 லட்சம் ரூபாய்க்கு பணம் செலவாகியிருப்பதாக ஊராட்சி நிர்வாகம் கணக்கு காட்டி இருப்பதாகவும் குற்றச்சாட்டு தெரிவித்து 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் ஊராட்சி நிர்வாகம் முறையான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வரவு செலவு கணக்கு தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்கும் வரை உண்ணாவிரத போராட்டத்தை தொடர் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...