கோரிக்கைகளை வலியுறுத்தி தாராபுரத்தில் சாலை பணியாளர்கள் ரத்த கையெழுத்து இயக்க ஆர்ப்பாட்டம்

சாலை பணியாளர்களின் 41 மாத பணி காலத்தை ஓய்வூதியத்துக்கு பொருந்தக்கூடிய வகையில் முறைப்படுத்த வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தாராபுரத்தில் சாலை பணியாளர்கள் ரத்த கையெழுத்து இயக்க ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: சாலை பணியாளர்கள் அனைவருக்கும் தர ஊதியம் ரூ.1900 வழங்க வேண்டும் என்று சாலை பணியாளர்கள் கேட்டுகொண்டனர்.

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பராமரிப்பு ஊழியர்கள் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி ரத்த கையெழுத்திட்டு நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு கோட்டத்தலைவர் ஜே.பீட்டர் தலைமை தாங்கினார்.

அப்போது தாராபுரம் கோட்டத்தில் சாலை பணியாளர்களின் 41 மாத பணி காலத்தை ஓய்வூதியத்துக்கு பொருந்தக்கூடிய வகையில் முறைப்படுத்த வேண்டும், சாலை பணியாளர்கள் அனைவருக்கும் தர ஊதியம் ரூ.1900 வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

பிறகு ரத்த கையெழுத்திட்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது கோட்டச்செயலாளர் செந்தில்குமார், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் வட்ட கிளை பொருளாளர் பாலா ராஜசேகர், பொது சுகாதாரத்துறை அலுவலர் சங்கத்தின் மாநிலச்செயலாளர் ராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

ரத்த கையெழுத்து படிவங்களை வருகிற 13-ந்தேதி சென்னையில் முதல்-அமைச்சர் இல்ல அலுவலகத்தில் சாலை பணியாளர்கள் அனைவரும் பெருந்திரள் முறையீடு இயக்கம் நடத்தி வழங்குவது என்றும், அதில் அனைவரும் கலந்து கொள்வதெனவும் முடிவு எடுக்கப்பட்டது. முடிவில் சாலை பராமரிப்பு ஊழியர் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் ஈஸ்வரமூர்த்தி நன்றி கூறினார்.

Newsletter

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...