தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் மக்கள் ஒற்றுமை உறுதி மொழி

மகாத்மா காந்தி பிறந்த நாளில் மக்கள் ஒற்றுமை காத்திட வேண்டும் என்று தாராபுரம் நெடுஞ்சாலை துறை அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஒற்றுமை உறுதி மொழி ஏற்கப்பட்டது.


திருப்பூர்:நாம் சாதிய சிந்தனையை தூக்கி எறிவேம் என்று நூற்றுக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

தாராபுரத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில், மகாத்மா காந்தி பிறந்த நாளில் மக்கள் ஒற்றுமை காத்திட, மத நல்லிணக்கம் பேணிட, சாதி, சமயம், பேதமற்ற சம உலக சமத்துவம் படைத்திட அரசு ஊழியர்கள் மக்கள் ஒற்றுமையை உயர்த்தி பிடிப்போம் என்று மக்கள் ஒற்றுமை உறுதி மொழி ஏற்கும் கூட்டம், தாராபுரம் நெடுஞ்சாலை துறை அலுவலக வளாகத்தில், அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ராணி தலைமையில் நடைபெற்றது.



அப்போது அரசு ஊழியர்கள் நாம் சாதிய சிந்தனையை தூக்கி எறிவேம், மத ரீதியிலான பாகுபாட்டை உடைத்து எறிவேம் என்பன உள்ளிட்ட கருத்துகளை முன்வைத்து காந்தி பிறந்த நாளில் 100-க்கும் மேற்பட்டோர் உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன், வட்ட கிளை தலைவர் செந்தில் குமார், மாவட்ட பொருளாளர் முருக சாமி உள்ளிட்ட மாவட்ட, வட்ட கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...