கொடிசியா பகுதியில் தனியார் பள்ளி அமைத்த வேகத்தடையால் ஒரே நாளில் பல்வேறு விபத்துகள் நடைபெற்றது கண்டிபிடிப்பு

கோவை கொடிசியா பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சந்திரகாந்த் என்பவர் விழுந்து உயிரிழந்த அதே நாளில் அங்கு ஏற்பட்ட பல்வேறு விபத்துகளின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


கோவை: அனுமதியின்றி தனியார் பள்ளி நிர்வாகம் அமைத்த வேகத்தடையால் ஒரே நாளில் பல்வேறு விபத்துக்கள் நடத்துள்ளது என்பது சிசிடிவி காட்சிகள் மூலம் தெரியவந்துள்ளது.

கோவை கொடிசியா பகுதியில் உள்ள கீதாஞ்சலி என்ற தனியார் பள்ளி அருகில் அனுமதியின்றி பள்ளி நிர்வாகத்தால் போடப்பட்ட வேகத்தடையில் வெள்ளை கோடுகளை குறிப்பிடாத காரணத்தினால், கடந்த வெள்ளிகிழமை (29.09.2023) இரவு அவ்வழியாக வந்த சந்திரகாந்த்(26) என்ற இளைஞர் நிலை தடுமாறி கீழே விழுந்து உயிரிழந்தார்.

அதன் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் காவல்துறையினர் அந்த வேகத்தடையை முற்றிலுமாக அகற்றினர். மேலும் அனுமதியின்றி மாநகராட்சி பகுதிகளில் வேக தடைகளை யாரும் அமைக்க கூடாது என மாநகராட்சி நிர்வாகம் தரப்பிலும் அறிக்கை வெளியிடப்பட்டது.

இந்நிலையில் சந்திரகாந்த் விழுவதற்கு முன்பு அதே நாளில்(29.09.2023) அந்த வேகத்தடையால் பல்வேறு வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விழுந்துள்ளனர். அவர்களும் வேகத்தடை அங்கு அமைக்கப்பட்டு இருப்பதை உணராமலும் வெள்ளை கோடு இல்லாததால் நிலை தடுமாறி விழுந்தவர்களே ஆவர். தற்பொழுது அவ்விபத்துகளின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...